அன்றாடம் 165,000 பேர் எல்லையைக் கடக்கின்றனர்

அன்றாடம் 165,000 பேர் எல்லையைக் கடக்கின்றனர்

1 mins read
6853a0d4-e28a-4194-adfe-e3e8d0f4a457
-

சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­வுக்­கும் இடை­யில் சென்ற ஏப்­ரல் 1ஆம் தேதி நிலப் போக்­கு­வ­ரத்­துக்­கான எல்­லை­கள் திறக்­கப்­பட்ட பிறகு, அன்­றா­டம் சரா­ச­ரி­யாக 165,000க்கும் அதி­க­மா­னோர் பய­ணம் செய்­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஜோகூர் மாநில முதல்­வர் ஓன் ஹஃபிஸ் காஸி, நேற்று மாநில சட்­ட­மன்­றக் கூட்­டத்­தில் இத­னைத் தெரி­வித்­தார்.

சட்­ட­மன்ற உறுப்­பி­னர் ஆண்ட்ரூ சென்­னின் கேள்­விக்கு அவர் பதி­ல­ளித்­தார்.

துவாஸ், உட்­லண்ட்ஸ் என இரு சோத­னைச்­சா­வ­டி­க­ளி­லும் அதி­கரித்­துள்ள போக்­கு­வ­ரத்­தைச் சமா­ளிக்க உரிய ஏற்­பா­டு­களில் கவ­னம் செலுத்­தப்­ப­டு­வ­தாக முதல்­வர் ஓன் குறிப்­பிட்­டார்.

குடி­நு­ழைவு, சுங்­கச் சாவ­டி­களில் நெரி­ச­லைத் தவிர்க்­க­வும், சேவையை மேம்­ப­டுத்­த­வும் மலே­சி­யா­வின் மத்­திய அர­சு­டன் இணைந்து ஜோகூர் மாநில அரசு முயற்சி மேற்­கொள்­வ­தாக அவர் தெரி­வித்­தார்.