கொலை மிரட்டல் விடுத்தவருக்குச் சிறை

கொலை மிரட்டல் விடுத்தவருக்குச் சிறை

1 mins read
b2fa44ea-52b4-43b0-8a15-532cf2f58af2
-

இரு வேறு சம்­ப­வங்­களில் பெண்­க­ளைக் கொலை செய்­யப்­போ­வ­தாக மிரட்­டல் குறுஞ்­செய்தி அனுப்­பிய ஆட­வ­ருக்கு மூன்று வாரச் சிறைத்­தண்­ட­னை­யு­டன் 4,000 வெள்ளி அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டது.

பாது­காப்பு அலு­வ­ல­ரான 53 வய­தா­கும் பெரி­ய­சாமி கண்­ணன் தன் மீது சுமத்­தப்­பட்ட இரண்டு துன்­பு­றுத்­தல் குற்­றச்­சாட்­டு­க­ளை­யும் ஒப்­புக்­கொண்­டார். மது அருந்­தி­விட்­டுப் பிற­ருக்­குத் தொந்­த­ரவு தந்­த­தை­யும் அவர் ஒப்­புக்­கொண்­டார்.

முதல் சம்­ப­வத்­தில் அவர் பணி­பு­ரிந்த கட்­ட­டத்­தில் பொருள் விநி­யோ­கம் செய்­ய­வந்த 20 வய­துப் பெண்­ணின் கைத்­தொ­லை­பேசி எண்ணை வாங்­கிக்­கொண்டு பின்­னர் அவ­ரு­டன் பாலி­யல் உற­வு­கொள்ள அழைப்­பு­வி­டுத்­தார். அந்­தப் பெண் மறுக்­கவே கொலை மிரட்­டல் விடுத்­தார் பெரி­ய­சாமி.

சென்ற ஆண்டு ஆகஸ்ட்டில் தட்­டிக்­கேட்க வந்த பெண்­ணின் காத­ல­ரை பெரி­ய­சாமி அடித்­துத் துரத்­தி­ய­தா­கக் கூறப்­பட்­டது. இதையடுத்து பெண்ணின் காதலர் காவல்துறையில் புகாரளித்தார்.

இதையடுத்து சென்ற அக்டோபரில் நடந்த மற்­றொரு சம்­ப­வத்­தில், மது அருந்திவிட்டு குடி­யி­ருப்­புக் கட்­ட­டமொன்றில் வேலைக்குச் சென்றார். குடியிருப்பாளர்களின் புகாரையடுத்து பெரியசாமி மது அருந்­தி­யி­ருந்­தது குறித்து விசா­ரித்த குடி­யி­ருப்பு மேலா­ள­ருக்கு வேலை நேரம் முடிந்த பிறகு, தான் ஒரு பெண்­ணைக் கொல்­லப்­போ­வ­தா­கக் குறுஞ்­செய்தி அனுப்­பி­னார்.

அத்துடன் அருகில் உள்ள புல்தரையில் தனது சீருடையைத் தீயிட்டுக் கொளுத்தி அந்தப் புகைப்படத்தை மேலாளருக்கு அனுப்பிவைத்ததாகக் கூறப்பட்டது.

இதையடுத்து குடியிருப்பு மேலாளர் பெரியசாமி குறித்துக் காவல்துறையிடம் புகாரளித்தார்.

இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என்றும் குடியிருப்புக் கட்டடத்திற்குச் சேதம் ஏதுமில்லை என்றும் கூறப்பட்டது.