மின்சார செலவைச் சமாளிக்க நிறுவனங்களுக்கு மானியம்

2 mins read
541c7ad9-a0a3-4f79-9921-71bc5c71bf7b
-

மின்­சா­ரப் பயன்­பாட்­டுச் செல­வு­கள் உயர்ந்து வரும் நிலை­யில், சில துறை­க­ளைச் சேர்ந்த உள்­ளூர் நிறு­வ­னங்­கள் தங்­க­ளது எரி­சக்­திச் செல­வு­க­ளைக் குறைப்­ப­தில் உத­வி பெற புதிய மானி­யத்­திற்கு விண்­ணப்­பிக்­க­லாம். இதற்­காக 'எரி­சக்தி சிக்கன மானி­யம்' என்­னும் புதிய திட்­டத்தை நிதி அமைச்சு நேற்று அறி­வித்­தது.

உணவு சேவை­கள், உணவு தயா­ரிப்பு மற்­றும் சில்­லறை விற்­ப­னைத் துறை­க­ளைச் சேர்ந்த சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் எரி­சக்தி சிக்­கன சாத­னங்­க­ளைப் பொருத்­திக்­கொள்ள 70 விழுக்­காடு வரை­யி­லான நிதி ஆத­ர­வைப் பெற இந்த மானி­யம் கைகொ­டுக்­கும்.

ஒவ்­வொரு நிறு­வ­ன­மும் அதி­க­பட்­சம் $30,000 வரை மானிய உதவி பெற­லாம். எல்­இடி விளக்கு, குளி­ரூட்டி, சமை­ய­லறை புகை­போக்கி, குளிர்­சா­த­னப் பெட்டி, நீர் சூடேற்றி மற்­றும் உலர்த்தி போன்ற அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட எரி­சக்தி சிக்­கன சாத­னங்­களை வாங்க அந்­நி­று­வ­னங்­க­ளுக்கு இத்­தொகை உத­வும்.

அதிக மின்­சா­ரப் பயன்­பாட்­டுச் செல­வு­க­ளால் ஒட்­டு­மொத்த வர்த்­த­கச் செல­வு­களில் தாக்­கம் ஏற்­பட்டு, கணி­ச­மான பாதிப்­புக்கு ஆளான நிறு­வ­னங்­கள் இந்­தப் புதிய மானி­யத்­திற்­குத் தகு­தி­பெ­றும் என்று நிதி அமைச்சு தனது அறிக்­கை­யில் தெரி­வித்துள்­ளது.

"எரி­சக்­திச் சிக்­க­னத்தை மேம்­ப­டுத்­து­வ­தன் மூலம் வர்த்­த­கச் செல­வு­க­ளைக் குறைக்க இது­போன்ற நிறு­வ­னங்­க­ளுக்கு மானி­யம் உத­வும்," என்­றது அமைச்சு.

"கட்டு மீறிச் செல்லும் எரி­சக்­திச் செல­வு­களை நிர்­வ­கிக்க நமது வர்த்­த­கங்­க­ளுக்கு உத­வும்­பொ­ருட்டு நீண்­ட­கா­லம் நீடிக்­கக்­கூ­டிய அம்­சம் இந்த மானி­யத் திட்­டம்," என்­றும் அது குறிப்­பிட்­டது.

உரு­மாற்ற முயற்­சி­களை நீண்­ட­கா­லத்­திற்­குத் தொடர நிறு­வ­னங்­க­ளுக்­குத் தேவைப்­படும் கூடு­தல் உத­வி­களை அர­சாங்­கம் செய்­யும் என்று உத­வித் திட்­டங்­களை அறி­விக்­கை­யில் துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் தெரி­வித்­தார்.

புதிய மானி­யத்­திற்கு விண்­ணப்­பம் செய்­யும் நிறு­வ­னங்­கள் சிங்­கப்­பூ­ரில் பதிவு செய்­யப்­பட்டு இருப்­ப­தோடு, வாங்­கப்­படும் எரி­சக்தி சிக்­கன சாத­னங்­களை இங்கு பயன்­ப­டுத்த வேண்­டும்.

தகு­தி­பெ­றும் நிறு­வ­னங்­கள் புதிய மானி­யத்­திற்கு செப்­டம்­பர் 1 முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை விண்­ணப்­பிக்­க­லாம்.

விண்­ணப்­பம் சமர்ப்­பிக்­கப்­பட்­டது முதல் ஓராண்­டுக்­குள் சாத­னங்­களை வாங்குவதோடு, வாங்­கிய தொகைக்­கான உத­வி­பெற விண்­ணப்­பிக்க வேண்­டும். உதவி நாடும் கோரல்­களை 2024 மார்ச் 31 வரை சமர்ப்­பிக்­க­லாம்.எரி­சக்­திச் சிக்­கன நட­வ­டிக்­கை­யைக் கடைப்­பி­டிக்க இங்­குள்ள நிறு­வ­னங்­க­ளுக்கு ஏற்­கெ­னவே செய்­யப்­பட்டு வரும் உத­விக்கு மேலாக புதிய மானி­யம் அறி­விக்­கப்­பட்டுள்­ளது.

உற்­பத்­தித் துறை நிறு­வ­னங்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்­கும், தேசிய சுற்­றுப்­புற வாரி­யத்­தின் எரி­சக்தி சிக்­கன நிதி, தற்­போ­தைய 2.0 கட்­ட­டங்­க­ளுக்கு உத­வும், கட்­டட, கட்­டு­மான ஆணை­யத்­தின் பச்சை முத்திரை ஊக்­கத்­தொ­கைத் திட்­டம் போன்­றவை நடப்­பிலுள்ளவை. நிதி, போக்­கு­வ­ரத்து மூத்த துணை அமைச்­சர் சீ ஹொங் டாட் நேற்­றைய செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் இதனை விவ­ரித்­தார்.