சிரமம் குறைய சிறப்பு உதவிகள்

சிரமம் குறைய சிறப்பு உதவிகள்

3 mins read
aa172f8e-f25e-4345-90fa-75c88b5fd2fc
-

தடையால் பாதிக்கப்பட்ட கோழி அறுப்பு நிலையங்களுக்கு உதவி

மலேசிய இறக்குமதித் தடையால் பாதிக்கப்படும் கோழி அறுப்பு நிலையங்கள் ஒரு மாத வெளிநாட்டு ஊழியர் தீர்வைக் கழிவு பெறும். துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்த உதவித் தொகுப்பில் இதுவும் அடங்கும். சிங்கப்பூரில் 11 கோழி அறுப்பு நிலையங்கள் உள்ளன. கோழி ஏற்றுமதித் தடையால் இவற்றில் சில நிலையங்கள் தற்காலிகமாகப் பணியை நிறுத்தவேண்டி இருந்தது. மேலும் சில நிலையங்கள் தங்களது ஊழியர்களை விடுப்பு எடுத்துக்கொள்ளக் கூறின. மலேசியாவில் கோழிகளுக்கு ஏற்பட்டுள்ளத் தட்டுப்பாட்டைச் சமாளிக்கும் பொருட்டு, ஜூன் 1 முதல் கோழி ஏற்றுமதிக்கு அந்நாடு தடை விதித்தது. சிங்கப்பூருக்கு விநியோகிக்கப்படும் மொத்த கோழிகளில் 34 விழுக்காடு மலேசியாவில் இருந்து வருபவை என சிங்கப்பூர் உணவு அமைப்பின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோழிகளில் பெரும்பாலானவை உயிருடன் தருவிக்கப்பட்டு இங்கு வெட்டப்பட்டு விற்கப்படுவது வழக்கம்.

கம்போங் கோழி எனப்படும் நாட்டுக்கோழிகளையும் கறுப்புக் கோழிகளையும் ஏற்றுமதி செய்வதற்கான தடையைக் கடந்த வாரம் நீக்கிய மலேசியா, சிங்கப்பூரில் பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்படும் பிராய்லர் கோழி களுக்கான தடை நீடிக்கும் என்று தெரிவித்தது. இந்தத் தடையால் இங்குள்ள கோழி அறுப்பு நிலைய ஊழியர் களின் வாழ்வாதாரம் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்றைய செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்ற மனிதவள மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் தெரிவித்தார்.

நிதிக் கையிருப்பு தேவைப்படாது

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள $1.5 பில்லியன் ஆதரவு தொகுப்புத் திட்டத்திற்குத் தேவைப்படும் நிதியை அரசாங்க நிதிக் கையிருப்பில் இருந்து எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார். அதற்குப் பதில் நடப்பில் உள்ள அர சாங்கத்தின் வரவுசெலவுத் திட்டம் மூலம் இதற்கு நிதி வழங்கப்படும் என்றும் அவர் நேற்று கூறினார்.

எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் வலுவான பொருளி யல் மீட்சி காரணமாக 2021 நிதி ஆண்டில் அதிகமான வருவாய் வசூலான தாகக் குறிப்பிட்ட அவர், விலைவாசி ஏற்றத்தைச் சமாளிக்க வர்த்தகர்களுக்கும் சிங்கப்பூரர் களுக்கும் உதவிக்கரம் நீட்டும் வகையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு இந்த வருவாய் பயன்படும் என்றார். அதேநேரம் கொவிட்-19 கொள்ளைநோயைச் சமாளிக்க ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து ஒரு பகுதி இதற்கு எடுக்கப்படும் என்றும் திரு வோங் சொன்னார். ஓமிக்ரான் தொற்று எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் முன்கூட்டியே வீரியம் இழந்ததால் அதற்காக ஒதுக்கப்பட்ட செலவுத் தொகை புதிய ஆதரவுத் தொகுப்புக்கு உதவும் என்றார் அவர்.

"இந்தக் காரணங்க ளால் கூடுதல் வரவுசெலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட வேண்டிய அவசியம் இருக்காது. ஒரு வரவுசெலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அதிக நிதி தேவைப்படும் பட்சத்தில் கூடுதல் வரவுசெலவுத் திட்டம் தயாரிக்கப்படும்," என்றார் திரு வோங்.

சவால்களைச் சமாளிக்க பொருளியல் சீர்திருத்தம் தொடருவது அவசியம்

பண­வீக்­கம் மட்­டுமே சிங்­கப்­பூர் இப்­போது எதிர்­கொண்­டு­

வ­ரும் சவாலன்று என்­றும் இந்­தப் பரந்த உல­கில், கட்­ட­மைப்பு மாற்­றங்­களை மேற்­கொள்ள பொரு­ளி­யல் சீர்­தி­ருத்­தம் தொடர வேண்­டி­யது அவ­சி­யம் என்­றும் துணைப்

பிர­த­மர் லாரன்ஸ் வோங் தெரி­வித்து இருக்­கி­றார்.

பரு­வ­நிலை மாற்­றம், அதி­க­ரித்­து­வ­ரும் புவி­சார் அர­சி­யல் பதற்­ற­நி­லை­கள், அமெ­ரிக்கா-சீனா இடை­யி­லான உத்தி­பூர்வப் போட்­டி­யால் மேலும் பிள­வு­படும் உல­க­ளா­விய அமைப்பு ஆகி­ய­வையும் அவற்­றில் அடங்­கும்.

உள்­ளூர் அள­வில், மூப்­ப­டை­யும் மக்­கள்­தொகை போன்ற சவால்­க­ளை­யும் சிங்­கப்­பூர் எதிர்­கொள்ள வேண்­டி­யுள்­ளது. அதற்­காக அர­சாங்­கம் அதி­கம் செல­விட

வேண்­டி­யி­ருக்­கும்.

"நிலை­யில்­லாத, முன்­னில்­லா­த­தை­விட அபா­ய­மிக்­க­தாக இருக்­கும் என எதிர்­பார்க்­கப்­படும் இந்­தப் புதிய உல­கிற்கு ஏற்­ற­படி, அடிப்­ப­டை­யில் நம்மை நாமே மறு­சீ­ர­மைக்க வேண்­டி­யுள்­ளது," என்­றார் திரு வோங்.

அத­னால்­தான் பொரு­ளி­யல் சீர்­தி­ருத்­தங்­களை சிங்­கப்­பூர் முடுக்­கி­விட வேண்­டி­யுள்­ளது என்றும் அவர் சொன்­னார்.

"விலை­வாசி உயர்வு, வாழ்க்­கைச் செல­வி­னங்­கள் போன்ற இப்­போ­தைய பிரச்­சி­னை­கள் குறித்து சிங்­கப்­பூ­ரர்­கள் பல­ரும் கவ­லைப்­ப­டு­வதை அறிந்­துள்­ளேன். அவை, நமது செயல்­பாட்­டுச் சூழ­லில் பெரும் கட்­ட­மைப்பு மாற்­றங்­க­ளுக்கு ஏற்ப நம்மை மாற்­றிக்­கொள்­வ­தை­யும் பற்­றி­யது," என்­றும் அமைச்­சர் வோங் கூறி­னார்.