மேல்முறையீடு வெற்றி அடைந்தால் புதிய கடவுச்சீட்டுகளை சில நாள்களில் பெறலாம்

மேல்முறையீடு வெற்றி அடைந்தால் புதிய கடவுச்சீட்டுகளை சில நாள்களில் பெறலாம்

1 mins read
10f42251-7a72-48d4-b9ef-9975481b70b6
-

அவ­ச­ர­மாக வெளி­நாடு செல்ல வேண்­டிய பய­ணி­கள், இணை­யத்­தில் வெற்­றி­க­ர­மாக மேல்­மு­றை­யீடு செய்­தால் தங்­கள் புதிய கட­வுச்­சீட்­டு­களை சில நாள்களில் பெற­லாம் என்று குடி­நு­ழைவு, சோத­னைச்­சா­வடி ஆணை­யம் (ஐசிஏ) அதன் இணை­யப் பக்­கத்­தில் குறிப்­பிட்­டுள்­ளது.

ஐசிஏ இணை­யப் பக்­கத்­தில் இந்­தத் தக­வல் இந்த மாதத் தொடக்­கத்­தில் புதுப்­பிக்­கப்­பட்­ட­தாக அறி­யப்­ப­டு­கிறது. அவ­சர கோரிக்­கை­க­ளுக்கு ஒரு வாரத்­திற்­குள் அல்­லது பய­ணத் தேதிக்கு குறைந்­தது இரு நாள்­க­ளுக்கு முன்பு ஐசிஏ பதில் அளிக்­கும் என்று இணை­யப் பக்­கத்­தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இணை­யத்­தில் மேல்­மு­றை­யீடு செய்­வோர் விமா­னப் பய­ணச்­சீட்டுகள், பயண விவ­ரம் அல்­லது ஹோட்­டல் முன்­ப­தி­வு­கள் போன்ற ஆவ­ணங்­க­ளைப் பதி­வேற்­றம் செய்ய வேண்­டும்.

மேல்­மு­றை­யீடு வெற்­றி­க­ர­மாக அமைந்­தால் ஐசிஏ கட்­ட­டத்­திலோ 27 அஞ்­சல் அலு­வ­ல­கங்­களில் ஏதே­னும் ஒன்­றிலோ கட­வுச்­சீட்டு­களைப் பெற்­றுக்­கொள்­ள­லாம்.

புதிய கட­வுச்­சீட்­டு­க­ளைப் பெற்றுக்­கொள்ள பய­ணி­கள் குறைந்­தது ஆறு வாரங்­கள் காத்து இருக்க நேரி­டும் என்று முன்­ன­தாக தெரி­விக்­கப்­பட்டு இருந்­தது.

ஒவ்­வொரு நாளும் ஐசிஏ 5,000க்கும் அதி­க­மான கட­வுச்­சீட்டு­களை வழங்கி வரு­கிறது. 2019ஆம் ஆண்டில் வழங்­கப்­பட்ட கட­வுச்­சீட்டு­களின் எண்­ணிக்­கை­யை­விட இது கிட்டத்­தட்ட மூன்று மடங்­கா­கும்.