டெங்கி, ஸிக்கா குறித்த ஆய்வை ஒருங்கிணைக்க புதிய நிலையம்

டெங்கி, ஸிக்கா குறித்த ஆய்வை ஒருங்கிணைக்க புதிய நிலையம்

2 mins read
c408eac2-788c-4ff5-bd9c-553d059b0863
-

டெங்கி, ஸிக்கா போன்ற கொசுக்­க­ளால் பர­வும் நோய்­க­ளுக்கு எதி­ரான சிகிச்சை முறை­யைத் தயா­ரிப்­ப­தன் மூலம் அந்­நோய்­களை எதிர்­கொள்ள புதிய ஆய்வு நிலை­யம் ஒன்று உத­வும்.

டியுக்-என்­யு­எஸ் மருத்­து­வப் பள்ளிக்­கும் ஜான்­சன் & ஜான்­சன் மருந்­துத் தயா­ரிப்பு நிறு­வ­னத்­துக்கும் இடை­யி­லான பங்­கா­ளித்­துவ முயற்­சி­யில் 'ஜே&ஜே செட்­ட­லைட் சென்­டர் ஃபார் குளோ­பல் ஹெல்த் டிஸ்­க­வரி' எனும் ஆய்வு நிலை­யம் நேற்று தொடங்­கப்­பட்­டது.

'ஃபிளேவி­வை­ரஸ்' எனும் கிருமி­யால் ஏற்­படும் நோய்­களில் அது கவ­னம் செலுத்­தும். அத்­த­கைய நோய்­க­ளுக்கு தற்­போது குறிப்­பிட்ட சிகிச்­சை­கள் கிடை­யாது என்று டியுக்-என்­யு­எஸ் மருத்­து­வப் பள்ளி வெளி­யிட்ட ஓர் அறிக்­கை­யில் தெரி­வித்­தது. மஞ்­சள் காய்ச்­சல் போன்ற நோய்­க­ளை­யும் ஏற்­ப­டுத்­தும் 'ஃபிளேவி' கிருமி, ஒவ்­வோர் ஆண்டும் ஏறக்­கு­றைய 400 மில்­லி­யன் பேரைத் தொற்­று­வ­தாக டியுக்-என்­யு­எஸ் குறிப்­பிட்­டது.

சிங்­கப்­பூ­ரில் இவ்­வாண்டு இது­வரை 15,800க்கும் அதி­க­மா­னோ­ரி­டம் டெங்­கிப் பாதிப்பு கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக தேசிய சுற்­றுப்­புற வாரி­யத்­தின் தக­வல் தெரி­விக்­கிறது. ஒப்­பு­நோக்க, கடந்த ஆண்டு முழு­வ­தும் 5,258 பேரி­டம் டெங்கி கண்­ட­றி­யப்­பட்­டி­ருந்­தது.

இத்­த­கைய நோய்­க­ளின் பர­வலைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தில் இந்த ஆய்வு நிலை­யம் சிறந்து விளங்­கும் என்­ப­தில் தமக்கு நம்­பிக்கை இருப்­பதாக டியுக்-என்­யு­எஸ் பள்­ளி­யில் புத்­தாக்­கம், தொழில்­மு­னைவு துறை­யின் துணைத் தலை­வ­ரான இணைப் பேரா­சி­ரி­யர் கிறிஸ்­த­ஃபர் லாயிங் கூறி­னார்.

டெங்­கி­யைத் தடுப்­ப­தி­லும் அதைக் குணப்­ப­டுத்­து­வ­தி­லும் மருத்­து­வப் பரி­சோ­தனை ஒன்றை நடத்த சிங்­ஹெல்த் குழு­மத்­தின் 'இன்­வெஸ்­டி­கே­ஷ­னல் மெடி­சன்' பிரி­வு­டன் டியுக்-என்­யு­எஸ் பள்ளி அண்­மை­யில் பணி­யாற்­றி­யது.

டெங்­கித் தடுப்பு மருந்து தற்­போது இரண்­டாம் கட்­டப் பரி­சோ­த­னை­யில் இருப்­ப­தாக டியுக்-என்­யு­எஸ் பள்­ளி­யைச் சேர்ந்த பேரா­சி­ரி­யர் வீ எங் இயோங் தெரி­வித்­தார்.

டெங்­கிக் கிரு­மிப் பர­வ­லைத் தடுப்­ப­தில் நோய்த் தடுப்பு மருந்­து­க­ளைப் பயன்­ப­டுத்­த­லாம் என்று சிங்­கப்­பூ­ரில் கடந்த வாரம் நடை­பெற்ற 5வது ஆசியா டெங்கி உச்­ச­நிலை மாநாட்­டில் ஆய்­வா­ளர்­கள் பரிந்­து­ரைத்­த­னர்.

மருந்து எவ்­வ­ளவு விரை­வில் தயா­ரிக்­கப்­ப­டு­கிறது என்­பது, இந்தப் பரி­சோ­த­னை­கள் எவ்­வ­ளவு சிறப்­பாக நடந்­தே­று­கின்­றன என்­பதைப் பொறுத்தே உள்­ளது.

உலக சுகா­தார நிறு­வ­னத்­தில் ஆய்­வுக் கொள்கை, ஒத்­து­ழைப்­புத் துறை­யின் முன்­னாள் இயக்­கு­ந­ரான பேரா­சி­ரி­யர் டிக்கி பாங், ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழுக்கு கடந்த மாதம் எழு­திய வாச­கர் கடி­தம் ஒன்­றில், மூத்­தோ­ரி­டையே 'டெங்­வே­சியா' தடுப்­பூ­சி­யைப் பர­வ­லாக பயன்­ப­டுத்த அழைப்பு விடுத்­தார்.