சிங்கப்பூரில் வண்ணமிகு இரு மாண்டரின் மீன்கள் (படம்) முதன்முறையாக கண்டறியப்பட்டு உள்ளன. இந்த மீன் வகை பொதுவாக சிங்கப்பூரில் காணப்படாது. ஆனால் பிலிப்பீன்ஸ், இந்தோனீசியாவின் போர்னியோ, ஜாவா தீவுகளில் இவை காணப்படலாம்.
இந்த மீன்கள் மீன் காட்சியகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு இருக்கலாம் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் மீன் அறிவியலாளர்கள் நேற்று கூறினர்.
ஒன்15 மரினா ஆன் செந்தோசாவில் தாம் முக்குளிப்பில் ஈடுபட்டு இருந்தபோது இந்த மீன்களைத் தாம் கண்டதாக மருத்துவமனை பராமரிப்பு ஒருங்கிணைப்பாளர் வீனஸ் டான், 49, கூறினார்.