உட்லண்ட்ஸ், துவாஸ் குடிநுழைவு சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு

கடந்த வார இறுதியில் (ஜூன் 17 முதல் 19) தினசரி பயணிகளின் எண்ணிக்கை 278,000-ஆக இருந்தது என்றும் இது அதற்கும் முந்திய வார இறுதியுடன் ஒப்பிடுகையில் அதிகம் என்றும் சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்தது.


அப்போது தினசரி பயணிகளின் எண்ணிக்கை 267,000 ஆக இருந்தது.


ஜூன் மாதப் பள்ளி விடுமுறை தொடங்கிய பிறகு உட்லண்ட்ஸ், துவாஸ் எல்லைச் சாவடிகளில் போக்குவரத்து தொடர்ந்து நெரிசலாகவே இருப்பதாக ஆணையம் கூறியது.


அண்மைய தினசரி பயணிகள் எண்ணிக்கை விசாக தின வார இறுதியில் இருந்த 224,000-ஐ விட அதிகம். புனித வெள்ளி வார இறுதியில் தினசரிப் பயணிகளின் எண்ணிக்கை 149,000-ஆக இருந்தது.


இம்மாதம், போக்குவரத்து நெரிசல் தொடரும் என்று ஆணையம் எதிர்பார்க்கிறது.


போக்குவரத்து நெரிசல், பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவற்றுக்கு ஏற்பப் பயணங்களைத் திட்டமிடும்படி ஆணையம் பயணிகளைக் கேட்டுக்கொண்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!