சிங்கப்பூரில் கிருமித்தொற்றுச் சம்பவங்களின் வாராந்தர எண்ணிக்கை 23 விழுக்காடு அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் நேற்று (21 ஜூன்) அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை 6,393. இந்த எண்ணிக்கை அதற்கு முந்திய தினத்தோடு ஒப்பிடுகையில் இரண்டு மடங்கு அதிகம்.
இந்நிலையில், நோயின் தாக்கத்திலிருந்து காத்துக்கொள்ள தடுப்பூசி போட்டுக்கொள்வது மிகவும் முக்கியம் என்று அமைச்சு வலியுறுத்தியது.
பெரும்பாலும் ஓமிக்ரான் BA.4 மற்றும் BA.5 திரிபுகளே அதற்கு முக்கியக் காரணம் என்றும் அவை வேகமாகப் பரவுவதால் நோயுற்றோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று சுகாதார அமைச்சு அறிவுறுத்தியது.
ஐந்து புதிய கூட்டுப் பரிசோதனை மற்றும் தடுப்பூசி நிலையங்கள் நாளை (23 ஜூன்) முதல் செயல்படத் தொடங்கும். அவற்றுடன் நாடு முழுவதும் மொத்தம் பத்து நிலையங்கள் செயல்படும்.
மூத்தோருக்கு உதவ நடமாடும் தடுப்பூசிப் பிரிவும் விரைவில் செயல்படத் தொடங்கும்.