பட்டக்கல்வியை மேற்கொள்ளும் மாணவர்கள் கண்டுபிடிப்பு மூலம் கற்பதற்கும் வேகமாகச் சுழலும் வேலையிடத்தின் கடினத்துக்கு அவர்களைத் தயார்ப்படுத்துவதற்கும் நேரத்தையும் இடத்தையும் ஒதுக்குவதில் பல்கலைக்கழகங்கள் சமநிலை காண வேண்டும் என்று தேசிய இளையர் மன்றத் தலைமை நிர்வாகி டேவிட் சுவா கூறியிருக்கிறார்.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மனநலக் கருத்தரங்கில் நேற்று முன்தினம் கலந்துகொண்டு அவர் பேசினார்.
பல்கலைக்கழக மாணவர்கள் இடையே சராசரி மனவுளைச்சல் அளவு 10க்கு 7.6 ஆக இருந்ததாக அண்மைய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
தங்களுக்கு எவை எவையெல்லாம் முக்கியமானவை என்பது குறித்து பல்கலைக்கழக மாணவர்கள் முடிவெடுக்க வேண்டும் என்று நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் நல்வாழ்வு அலுவலக இயக்குநர் ஏதன் பாங் கூறினார்.

