அண்மையில் வேலையிடங்களில் விபத்துகளும் மரணங்களும் நிகழ்ந்திருப்பதை அடுத்து வேலையிடப் பாதுகாப்பை வலுப்படுத்த மனிதவள அமைச்சு கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
அதன்படி கூடுதல் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார அதிகாரிகள் நியமிக்கப்படுவர் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நேற்று அறிவித்தார்.
அதே நேரம், தரமற்ற வேலை அணுகுமுறைகளை நடைமுறைப்
படுத்தும் ஒப்பந்ததாரர்களுக்கான தண்டனையைக் கடுமையாக்குவது குறித்தும் வேலையிடப் பாதுகாப்பில் சிறப்பாகச் செயல்படும் ஒப்பந்ததாரர்களுக்குக் கூடுதல் வர்த்தக வாய்ப்புகள் வழங்குவது குறித்தும் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
சட்டப்படி தேவையான வேலையிடப் பாதுகாப்பு சுகாதார அதி
காரிகளின் எண்ணிக்கையைவிட பல நிறுவனங்கள் கூடுதல் அதிகாரிகளை வேலையில் அமர்த்தியிருப்பதை டாக்டர் டான் சுட்டினார்.
பயிற்சி பெற்ற, ஆற்றல்மிக்க வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார அதிகாரிகளால் ஒப்பந்ததாரர்களும் பலனடைவர் எனத் தாம் நம்பு
வதாக அவர் கூறினார்.
இந்தத் தகவல்களை அவர் தேவன் நாயர் வேலை நியமன, வேலை வாய்ப்பு பயிற்சிக் கழகத்தில் கட்டுமான நிறுவனங்களின் பிரதிநிதிகள், பாதுகாப்பு
அதிகாரிகள் ஆகியோருடன் நேற்று பகிர்ந்துகொண்டார்.
அந்த நிகழ்வில் சிங்கப்பூர் ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் வருடாந்திர பாதுகாப்பு, சுகாதார இயக்கம் தொடங்கிவைக்கப்பட்டது. வேலையிடப் பாதுகாப்பின் தரத்தை உயர்த்துவதில் சங்கத்தில் உறுப்பினர்
களிடையே விழிப்புணர்வை ஏற்
படுத்த இந்த இயக்கம் நடத்தப்படுகிறது.
வேலையிட மரணங்களைத்
தவிர்க்க கட்டுமானத் துறை தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்று அமைச்சர் டான் அழைப்பு விடுத்தார்.
ஊழியர்கள் வேலை முடிந்ததும் தங்கள் அன்புக்குரியவர்களிடம் திரும்புவதை உறுதிசெய்ய வேண்டும் என்றார் அவர்.
இவ்வாண்டில் மட்டும் 27 வேலையிட மரணங்கள் பதிவாகி இருப்பதாகவும் அவற்றில் 10 கட்டு மானத் துறையுடன் தொடர்புடையதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிலை கவலை அளிப்பதாக அவர் கூறினார்.
வேலையிடத்தில் பாதுகாப்பு, சுகாதாரக் குறைபாடு உள்ள நிறு
வனங்களுக்கு விதிக்கப்படும் தண்டனையை மனிதவள அமைச்சு கடந்த வாரம் மேலும் கடுமையாக்கியது. பாதுகாப்புச் சோதனை நடவடிக்கைகளின்போது குறைபாடு இருப்பது தெரியவந்தால் அதிகபட்சம் $5,000 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
பாரந்தூக்கி அடியில் சிக்கி
இந்திய நாட்டவர் மரணம்
இதற்கிடையே, நேற்று முன்
தினம் காலை 10.15 மணி அளவில் மண்டாய் குவாரி சாலையில் உள்ள கட்டுமானத் தளத்தில் இந்தியாவைச் சேர்ந்த 32 வயது ஊழியர் பாரந்தூக்கியின் அடியில் சிக்கி மாண்டார். ஹுவா யாங் இஞ்சினியரிங் நிறுவனத்தின் ஊழியரான அந்த ஊழியரை கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் சுயநினைவின்றி இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. விபத்து நிகழ்ந்ததற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெறுகிறது. விபத்து நிகழ்ந்த கட்டுமானத் தளத்தில் பாரந்தூக்கியைப் பயன்படுத்தும் பணிகளை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

