தம் மகளின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாட செந்தோசா தீவில் உள்ள சிலோசோ பீச் ரிசோர்ட்டில் தங்கிய பெண்ணுக்குக் காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது.
இம்மாதம் ஜூன் மாதம் 16ஆம் தேதி அதிகாலை 4.30 மணி அளவில் குளியலறையின் கண்ணாடிக் கதவு சிதறி விழுந்ததில்
41 வயது திருவாட்டி சுசியானா ஹமீது காயமுற்றார்.
அவரது கரங்கள், நெஞ்சுப் பகுதி, தலை ஆகியவற்றில்
வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன.
தமக்குக் காயம் ஏற்பட்டதைப் பார்த்த தமது 12 வயது மகள் அதிர்ச்சி அடைந்ததாக திருவாட்டி சுசியானா கூறினார்.
திரு சுசியானா மருத்துவ
மனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரது உடலிலிருந்து கண்ணாடித் துண்டுகள் அகற்றப்பட்டன.
அவருக்கு இரண்டு நாள் மருத்துவ விடுப்பு வழங்கப்
பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்படும் என்று செந்தோசா மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்தது. சம்பந்தப்பட்ட ஹோட்டல் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

