$3 கூடுதல் கட்டண உயர்வு ஆண்டிறுதி வரை நீட்டிப்பு

$3 கூடுதல் கட்டண உயர்வு ஆண்டிறுதி வரை நீட்டிப்பு

2 mins read
38ef4a75-c64a-4194-a404-d77f007827fc
சாங்கி விமான நிலையம் முனையம் 3ல் நேற்றுக் காலை 11.45 மணியளவில் டாக்சிகளில் ஏறிய பயணிகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சாங்கி விமான நிலையத்திலிருந்து டாக்சி ஏறும் பயணிகளுக்கு கட்டண உயர்வு பொருந்தும்

சாங்கி விமான நிலை­யத்­தில் இருந்து டாக்சிகளில் ஏறும் பய­ணி­கள் செலுத்தும் $3 கூடு­தல் கட்ட­ண உயர்வு, ஆண்­டி­றுதி வரை நடப்பில் இருக்கும். அதாவது, இக்கட்ட­ண உயர்வு ஆறு மாதங்­களுக்கு நீட்­டிக்­கப்­ப­டு­கிறது.

கடந்த மாதம் 19ஆம் தேதி நடப்­புக்கு வந்த இந்­தக் கூடு­தல் கட்­ட­ணம், ஜூன் 30ஆம் தேதி முடி­வடைய இருந்­தது. சாங்கி விமான நிலை­யத்­திற்கு டாக்­சி­க­ளின் வரத்தை அதி­க­ரிக்­கும் நோக்­கில் இந்­தக் கட்­டண முறை நடை­முறைப்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளது.

இப்­போது இந்­தக் கூடு­தல் கட்­ட­ணம் டிசம்­பர் 31ஆம் தேதி இரவு 11.59 மணி வரை நீட்­டிக்­கப்­ப­டு­வ­தாக எஸ்­எம்­ஆர்­டி­யின் துணை நிறு­வ­ன­மான ஸ்ட்­ரைட்ஸ் டாக்சி நேற்று அதன் ஃபேஸ்புக் பதி­வில் தெரி­வித்­தது.

இங்கிருந்து தொடங்கும் டாக்சி பயணங்களுக்கு தின­மும் மாலை 5 மணி­யில் இ­ருந்து இரவு 11.59 மணி வரை டாக்சி பய­ணங்­களுக்கு கூடு­த­லாக $8 செலுத்த வேண்­டி­யி­ருக்­கும். மற்ற நேரங்­களில் இக்­கூ­டு­தல் கட்­ட­ணம் $6ஆக இருக்­கும்.

கூடு­தல் கட்­டண உயர்வு நடப்­புக்கு வரு­வ­தற்கு முன்பு வெள்ளி, சனி, ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் மாலை 5 மணி­யி­லி­ருந்து இரவு 11.59 மணி வரை கூடு­தல் கட்­ட­ணம் $5 ஆக­வும் மற்ற நேரங்­களில் இது $3 ஆக­வும் இருந்­தது.

கம்­ஃபர்ட்­டெல்­குரோ, பிரைம் டாக்சி, பிரி­மி­யர் டாக்சி ஆகிய நிறு­வ­னங்­களும் இந்­தக் கூடு­தல் கட்­டண அதி­க­ரிப்பு நீட்­டிக்­கப்­ப­டு­வதாக நேற்று தெரி­வித்­தன.

சாங்கி விமான நிலை­யம், சாங்கி விமான சரக்கு மையம், விமான நிலைய காவல் நிலை­யம், சிங்­கப்­பூர் விமான நிலைய தள­வா­டப் பூங்கா ஆகிய இடங்­களில் இருந்து தொடங்­கும் டாக்சி பய­ணங்­க­ளுக்கு இந்­தக் கூடு­தல் கட்­ட­ணம் பொருந்­தும்.

பய­ணி­களை அழைப்­ப­தற்­காக விமான நிலை­யத்­திற்­குச் செல்ல டாக்சி ஓட்­டு­நர்­கள் தயங்­கி­ய­தால் கூடு­தல் டாக்சி கட்­ட­ணத்தை அதி­க­ரிக்க முடிவு செய்யப்­பட்­டது. கூடு­தல் கட்­டண உயர்வு நடப்­புக்கு வரு­வ­தற்கு முன்பு விமான நிலை­யங்­களில் டாக்­சி­க­ளுக்­காக பய­ணி­கள் நீண்ட வரி­சை­களில் காத்­தி­ருந்­த­னர்.

கூடு­தல் கட்­ட­ணம் அதி­க­ரிக்­கப்­பட்ட பிறகு, விமான நிலை­யத்­திற்கு வரும் டாக்­சி­க­ளின் எண்­ணிக்கை கூடி­யது. என்­றா­லும், பெட்­ரோல் விலை அதி­க­ரிப்பை இது ஈடு­செய்­ய­வில்லை என்று டாக்சி ஓட்­டு­நர்­கள் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் கூறி­யி­ருந்­த­னர். மேலும், பய­ணி­க­ளுக்­காக ஒரு மணி நேரம் வரை காத்­தி­ருக்க வேண்­டி­யி­ருந்­த­தா­க­வும் அவர்­கள் சொல்லி இருந்­த­னர்.

இந்­நி­லை­யில், சாங்கி விமான நிலை­யத்­தில் நில­வ­ரத்­தைக் கண்­ட­றிய ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­திக்­குழு நேற்­றுக் காலை முனை­யம் 3க்கு சென்­றது.

வரு­கை­யா­ளர் கூடத்­திற்கு வெளியே ஏறக்­கு­றைய 30 டாக்­சி­கள் வரி­சை­யில் நின்­றன. பய­ணி­கள் உட­னுக்­கு­டன் டாக்சி­களில் ஏற முடிந்­தது.

கூடு­தல் டாக்சி கட்­டண உயர்வு நீட்­டிக்­கப்­ப­டு­வது குறித்து அங்­கிருந்த டாக்சி ஓட்­டு­நர்­க­ளுக்­குத் தெரி­ய­வில்லை. எனி­னும், இதை தாங்­கள் வர­வேற்­ப­தாக அவர்­கள் கூறி­னர்.