அங் மோ கியோ, புக்கிட் மேரா, செங்காங், உட்லண்ட்ஸ், ஈசூன் ஆகிய பகுதிகளில் ஐந்து புதிய தடுப்பூசி நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையங்களில் ஆன்டிஜன் விரைவு பரிசோதனைகளும் பிசிஆர் பரிசோதனைகளும் நடத்தப்படுகின்றன என்று சுகாதார அமைச்சின் இணையப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றையும் சேர்த்து, சிங்கப்பூரில் கொவிட்-19 பரிசோதனையும் தடுப்பூசியும் வழங்கும் நிலையங்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.
புதிய கொவிட்-19 திரிபுகள் உருவெடுத்தால், செயல்பாடுகளை விரிவுபடுத்தும் வகையில் புதிய நிலையங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் தடுப்பூசி நிலையங்களுக்குச் சென்று இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்.