ருவாண்டாவில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் பிரதமர் லீ சந்திப்பு

ருவாண்டாவில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் பிரதமர் லீ சந்திப்பு

1 mins read
e014fda2-3929-436d-8d0c-21588282127f
காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்களின் சந்திப்புக்கு இடையில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை பிரதமர் லீ சியன் லூங் நேற்று சந்தித்தார். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு -

ருவாண்டா தலை­ந­கர் கிகா­லி­யில் நேற்று நடை­பெற்ற காமன்­வெல்த் அர­சாங்­கத் தலை­வர்­க­ளின் சந்திப்பின் தொடக்க விழா­வில் பிர­த­மர் லீ சியன் லூங் கலந்­து­கொண்­டார்.

நான்கு ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு நடத்­தப்­படும் இந்­தச் சந்­திப்­பின் தொடக்­கத்தை இந்த விழா குறிக்­கிறது.

பொது­வாக ஈராண்­டு­க­ளுக்கு ஒரு­முறை நடத்­தப்­பட்டு வந்த இந்தச் சந்­திப்பு, கொவிட்-19 பெருந்­தொற்று கார­ண­மாக இரண்டு முறை ஒத்திவைக்­கப்­பட்­டது. கடைசி­யாக 2018ல் லண்­ட­னில் இச்­சந்­திப்பு இடம்­பெற்­றது.

நேற்று முன்­தி­னம் காலை ருவாண்­டா­வைச் சென்று அடைந்த பிர­த­மர் லீ, ருவாண்டா அதி­பர் பால் ககாமி அன்று மாலை நடத்­திய வர­வேற்பு நிகழ்ச்­சி­யில் பங்­கேற்­றார்.

நகர மையப் பகு­தி­யில் நேற்று முன்­தி­னம் கார்­க­ளற்ற பகு­தி­யில் தாம் உல்லாசமாக நடந்து சென்று வந்­த­தாக ஃபேஸ்புக் பதிவு ஒன்­றில் பிர­த­மர் லீ குறிப்­பிட்­டார்.

இந்­தச் சந்­திப்­புக்கு இடையே இந்­திய வெளி­யு­றவு அமைச்­சர் எஸ்.ஜெய்­சங்­கரை பிர­த­மர் லீ நேற்று சந்­தித்­தார்.

இரு தலை­வர்­களும் வட்­டார, அனைத்­து­லக நில­வ­ரம் குறித்து கருத்­து­க­ளைப் பரி­மா­றிக்­கொண்­ட­தாக பிர­த­மர் லீயின் ஊட­கச் செய­லா­ளர் சாங் லி லின் கூறி­னார்.

தென்­கி­ழக்­கா­சியா உட­னான ஈடு­பாட்டை இந்­தியா எவ்­வாறு அதி­க­ரிக்­க­லாம், சிங்­கப்­பூ­ரும் இந்­தி­யா­வும் எந்­தெந்த அம்­சங்­களில் ஒத்­து­ழைக்­க­லாம் என்­பது குறித்தும் இரு தலை­வர்­கள் கலந்­து ஆலோ­சித்­த­னர்.