நான்காண்டு இலக்கு: 6,500 தொண்டூழியர்கள்

நான்காண்டு இலக்கு: 6,500 தொண்டூழியர்கள்

2 mins read
e2e4ca4f-706b-49c8-9c4b-9e977f2bc1d4
-

மோன­லிசா

வரும் 2026ஆம் ஆண்­டுக்­குள் 6,500 தொண்­டூ­ழிய வாய்ப்­பு­களை உரு­வாக்­க­வுள்­ள­தாக தேசிய நூலக வாரி­யம் தெரி­வித்­துள்­ளது.

கடந்த ஓராண்­டில் மட்­டும் ஏறத்­தாழ 2,000 தொண்­டூ­ழி­யர்­கள் காணொளி வாயி­லா­கக் கதை சொல்­லு­தல், கொவிட்- 19 நிகழ்­வு­களை சித்­தி­ரித்­தல், ஒளிப்­பதிவு, 'கோடிங்' எனப்படும் குறியீட்டு முறையை உருவாக்குதல், தொழில் வளர்ச்சி பற்­றிய பயி­ல­ரங்­கு­கள் போன்ற வெவ்­வேறு முயற்­சி­கள் மூலம் தொண்டு செய்­துள்­ள­னர். புதி­தாக வர­வி­ருக்­கும் பொங்­கோல் வட்­டார நூல­கத்­தை­யும் கணக்­கில்­கொண்டு இவர்­களின் எண்­ணிக்­கையை உயர்த்த நூலக வாரி­யம் திட்­ட­மி­டு­கிறது.

நேற்று சாங்கி விமான நிலை­யத்­தில் நடை­பெற்ற தொண்­டூ­ழி­யர்­க­ளுக்­கான பாராட்டு விழா­வில் இது­கு­றித்து பேசி­னார் தேசிய நூலக வாரி­யத் தலை­வர் லீ சியோ ஹியாங்.

"கொவிட்-19 நோய்த்­தொற்று காலத்­தி­லும் மின்­னி­லக்க வாய்ப்பு­க­ளைப் பயன்­ப­டுத்தி தொண்­டூ­ழி­யர்­கள் உத்­வே­கத்­து­ட­னும் நேர்த்­தி­யு­ட­னும் தொண்­டூ­ழி­யம் செய்து வந்­தது பாராட்­டத்­தக்­கது. தொடர்ந்து அவர்­கள் 'எல்­ஏபி 25' திட்­டத்­தின் வாயி­லா­கத் தங்­க­ளது நேரத்­தை­யும் புத்­தாக்­கச் சிந்­த­னை­க­ளை­யும் வாசிப்பு மற்­றும் கற்­றல் திறனை அதி­க­ரிக்­கும் வழி­மு­றை­க­ளை­யும் செயல்­ப­டுத்தி அனைத்து சிங்­கப்­பூ­ரர்­களும் பயன்­பெ­றும் வகை­யில் பங்­க­ளிக்க வேண்­டும்" என்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.

காணொளிவழி பிள்­ளை­களுக்குக் கதை சொல்லி வரு­கி­றார் தேசிய நூலக வாரி­யத்­தின் தொண்­டூ­ழி­ய­ரான 32 வயது ராஜ­லெட்­சுமி கண்­ணப்­பன் (படம்).

"எங்­கள் பிள்­ளை­கள் தாய்­மொழியை நாள­டை­வில் மறந்­து­வி­டு­வார்­களோ என்ற பயம் எனக்­கும் என் கண­வ­ருக்­கும் ஏற்­பட்­டது. அதன் விளை­வாக, கொவிட்-19 காலத்­தில் காணொளி வாயி­லா­கக் கதை சொல்­லும் இந்­தப் புதிய முயற்­சி­யைக் குடும்­ப­மாக நாங்­கள் செய்யத் தொடங்கினோம்.

"பிள்­ளை­க­ளுக்­கான நீதி­நெ­றி­கள், நற்­ப­ழக்­க­வ­ழக்­கங்­கள் ஆகி­ய­வற்றை மையப்­ப­டுத்­தும் கதை­களின் கதா­பாத்­தி­ரங்­க­ளாக நாங்­களே நடித்து, பின்­ன­ணிக் குர­லும் கொடுத்­தோம். இதன் மூலம் என் பிள்­ளை­கள் நிறைய புதிய தமிழ்ச் சொற்­க­ளைக் கற்­றுக்­கொண்­டார்­கள்," என்று ராஜ­லட்­சுமி கூறி­னார்.

மூன்று பிள்­ளை­க­ளுக்­குத் தாயான இவர், முடிந்­த­வரை தற்­போது குடும்­பத்­தில் அனை­வ­ரும் தமி­ழில் பேசு­வ­தா­கக் கூறி­னார்.

தேசிய நூலக வாரி­யத்­தின் இணை­யப் பக்­கத்­தில் இடம்­பெ­றும் இக்­கா­ணொ­ளி­கள் பய­னுள்­ள­தாக இருப்­ப­தா­கப் பெற்­றோர் பல­ரும் தன்­னி­டம் கூறி­யது மகிழ்ச்சி அளிப்­ப­தா­க அவர் பகிர்ந்­து­கொண்­டார்.

தொண்டூழியர் எண்ணிக்கையை மும்மடங்கு உயர்த்தத் திட்டமிடும் தேசிய நூலக வாரியம்