போதைப்பொருள் பயன்படுத்திய மாதுடன் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்பது மாதக் குழந்தை

போதைப்பொருள் பயன்படுத்திய மாதுடன் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்பது மாதக் குழந்தை

1 mins read
7d83e4a8-13ba-4a3c-88b2-27c1409e7cc1
-

மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு அதி­கா­ரி­கள் அண்­மை­யில் மேற்­கொண்ட அம­லாக்க நட­வ­டிக்­கை­யின்­போது ஒன்­பது மாத ஆண் குழந்­தைக்கு அரு­கில் 'ஐஸ்' போதைப்­பொ­ரு­ளைப் பயன்­ப­டுத்­திய மாதைக் கண்­டு­பி­டித்­த­னர்.

மாது இந்­தக் குழந்­தை­யின் தாயார் என்­றும் ஒற்­றைப் பெற்­றோ­ராக அவர் குழந்­தை­யைப் பரா­ம­ரிப்­ப­தா­க­வும் மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு நேற்று 'ஃபேஸ்புக்'கில் பதி­விட்­டது.

வீடு மிக­வும் அசுத்­த­மாக இருந்­த­தா­க­வும் போதைப்­பொ­ருள்­கள் வெளிப்­ப­டை­யா­கக் காணப்­பட்­ட­தா­க­வும் அது குறிப்­பிட்­டது.

சிங்­கப்­பூ­ரில் இத்­த­கைய காட்­சி­கள் மிக அரி­தா­னவை என்­றா­லும் போதைப்­பொ­ருள் பயன்­ப­டுத்­து­வோர் தாங்­களே தங்­கள் வாழ்வை அழித்­துக்­கொள்­வதை இது காட்­டு­வ­தாக அந்­தப் பதி­வில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

குழந்தை காவல் நிலை­யத்­துக்கு எடுத்­துச்­செல்­லப்­பட்டு பின்­னர் சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. குழந்­தை­யின் தாயார் போதைப்­பொ­ருள் மறு­வாழ்வு நிலை­யத்­திற்கு அனுப்­பப்­ப­டு­வார் என்று கூறப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரில் சென்ற ஆண்டு போதைப்­பொ­ருள் பயன்­ப­டுத்­து­வோர் கைது­செய்­யப்­பட்ட சம்­ப­வங்­கள் அதற்கு முந்­தைய ஆண்­டை­வி­டக் குறை­வா­கப் பதி­வா­யின. கொவிட்-19 தொடர்­பான கட்­டுப்­பா­டு­களும் இதற்­குக் கார­ணம் என்று அதி­கா­ரி­கள் கூறி­னர்.

கைது செய்­யப்­பட்­டோ­ரில் ஏறத்­தாழ 34 விழுக்­காட்­டி­னர் புதி­தாக போதைப்­பொ­ருள் பயன்­ப­டுத்­தத் தொடங்­கி­யோர்.

சிங்­கப்­பூரை போதைப்­பொ­ருள் புழக்­க­மற்ற நாடாக வைத்­தி­ருப்­பது தொடர்­பில் தொடர்ந்து பணி­யாற்­று­வ­தாக மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு கூறி­யது.