$6 மி. மோசடி தொடர்பில் 300க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை

சிங்கப்பூரில் பல மோசடி சம்பவங்கள் தொடர்பில் 300க்கும் மேற்பட்டவர்களை காவல் துறை விசாரித்து வருகிறது. இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் கிட்டத்தட்ட $6 மில்லியனை இழந்ததாகக் கூறப்பட்டது.

இரண்டு வார சோதனை நடவடிக்கையில் சந்தேக நபர்கள் பிடிபட்டனர். 15 வயதுக்கும் 78 வயதுக்கும் இடைப்பட்ட 220 ஆடவர்களும், 107 பெண்களும் விசாரிக்கப்பட்டு வருவதாக காவல் துறை தெரிவித்தது.

ஏமாற்று, பணமோசடி, உரிமம் இல்லாமல் கட்டணம் செலுத்தும் சேவை வழங்குதல் ஆகிய குற்றங்களுக்கு இவர்கள் விசாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

சந்தேக நபர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மோசடிகளில் ஈடுப்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது. வங்கி தொடர்பான மோசடி, இணையம் வழி காதல் மோசடி, வேலைவாய்ப்பு மோசடி, முதலீடு மோசடி, மின்வர்த்தக மோசடி, கடன் மோசடி, சீன நாட்டு அதிகாரிகள் போன்று நடித்து மோசடி செய்தது போன்ற வெவ்வேறு மோசடிகளை இவர்கள் மேற்கொண்டதாகக் கூறப்பட்டது.

மோசடிகளுக்கு எதிராக பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு காவல் துறை கேட்டுகொண்டது.

மோசடி செய்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறை உறுதியளித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!