குடிமைத் தற்காப்பு அதிகாரிகளின் நலனைக் கண்காணிக்கும் 'எக்ஸெல்'

குடிமைத் தற்காப்பு அதிகாரிகளின் நலனைக் கண்காணிக்கும் 'எக்ஸெல்'

1 mins read
08d4bde2-685b-47a4-8c62-579f63c68688
குடிமைத் தற்காப்பு அதிகாரிகளுக்கான 'எக்ஸெல்' கூடம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் அதிகாரிகள் தங்கள் உடல்நலம், மனநலம் தொடர்பான மருத்துவச் சோதனைத் தரவுகளைத் தெரிந்துகொள்ள இயலும்.

பயிற்சியின்போது இவர்கள் எந்தெந்த அம்சங்களில் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அடையாளம்காண இது உதவும்.

'எக்ஸெல்' என்று சுருக்கமாக அழைக்கப்படும் நெருக்கடி நேரப் பணியாளரின் உடலுறுதிப் பயிற்சி, மேம்பாட்டு ஆய்வுக்கூடம் இந்தத் தரவுகளைச் சேகரிக்க வகைசெய்கிறது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும், 'எச்டிஎக்ஸ்' எனப்படும் உள்துறை அமைச்சின் சீருடைப் பிரிவினருக்கான அறிவியல், தொழில்நுட்ப அமைப்பும் இணைந்து உருவாக்கிய இந்த ஆய்வுக்கூடம் ஜூன் மாதம் 10ஆம் தேதியன்று திறந்து வைக்கப்பட்டது.

கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து சுமார் 500 புதிய அதிகாரிகளின் தரவுகள் இதில் சேகரிக்கப்பட்டுள்ளன.