தெமாசெக்: பருவநிலை மாற்றம், உலகளாவியப் பூசல்களால் உணவு விலை பாதிப்பு

தெமாசெக்: பருவநிலை மாற்றம், உலகளாவியப் பூசல்களால் உணவு விலை பாதிப்பு

1 mins read
c3bbbaa1-1589-4ab9-a220-7b0f81ab65a6
-

பரு­வ­நிலை மாற்­றம், உக்­ரேன்-ரஷ்யா போர் ஆகி­யவை கார­ண­மாக உணவு விலை இவ்­வாண்டு பெரி­தும் பாதிப்­ப­டை­யும் என்று தெமா­செக் நிறு­வ­னத்­தின் நீடித்த, நிலைத்­தன்­மைப் பிரி­வின் தலைமை அதி­காரி ஸ்டீல் ஹாவர்ட் தெரி­வித்­துள்­ளார். இது நடுத்­தர வரு­மா­னக் குடும்­பங்­களை அதி­கம் பாதிக்­கும் என்­றார் அவர்.

ஏற்­கெ­னவே நடப்­பில் உள்ள விவ­சாய அணு­கு­மு­றை­யி­லி­ருந்து பல்­வ­கைப்­ப­டுத்­து­வ­தன் மூலம் இந்த நெருக்குதலிலிருந்து சற்று நிவா­ர­ணம் பெற­லாம் என்று டாக்­டர் ஹாவர்ட் கூறி­னார்.

அத்­து­டன், துரி­த­மான வகை­யில் நீடித்த நிலைத்­தன்மை உள்ள உணவு மூலா­தா­ரங்­களை உரு­வாக்­க­லாம் என்­றும் அவர் தெரி­வித்­தார். 2013ஆம் ஆண்­டி­லி­ருந்து உணவு மற்­றும் விவ­சா­யத்­தில் தெமா­செக் $8 பில்­லி­ய­னுக்­கும் அதி­க­மாக முத­லீடு செய்­துள்­ளது.

2030ஆம் ஆண்­டுக்­குள் தனக்­குத் தேவை­யான உண­வுப் பொருள்­களில் 30 விழுக்­காடு உண­வுப்­பொ­ருள்­களை உள்­ளூ­ரி­லேயே தயா­ரிக்க சிங்­கப்­பூர் இலக்கு கொண்­டுள்­ளது.

அதற்கு ஏற்ப தெமா­செக் நிறு­

வ­னம் முத­லீ­டு­க­ளைச் செய்து

உள்­ளது.