பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், உணவு வீணாகாமல் அதை மீட்போர் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.
கடந்த ஆறு மாதங்களில் செங்காங் உணவு மீட்பு அமைப்பு, ஒவ்வொரு வாரமும் கூடுதலாக 15லிருந்து 20 டன் உணவை
மீட்டுள்ளது. அவ்வாறு செய்யாமல் இருந்திருந்தால் அந்த உணவுப்பொருள்கள் வீசப்பட்டிருக்கும்.
முன்பைவிட, கடந்த ஆறு மாதங்களில் கூடுதல் உணவு மீட்கப்பட்டதாக அமைப்பின் இணை நிறுவனர் ஜெனட் லீ கூறினார்.
காலாவதித் தேதி கடந்த பிறகு, விற்பனை செய்ய முடியாத நிலையிலும் கெட்டுப் போகாமல் இருக்கும் உணவை மீட்போரில்
திருவாட்டி லீயும் ஒருவர்.
அவ்வாறு மீட்கப்பட்ட உணவை ஏற்றுக்கொள்வோருக்கு அது விநியோகிக்கப்படுகிறது. விற்கப்படாமல் மிச்சமாகும் உணவுப் பொருள்களை தொண்டூழியர்கள் எடுத்துச் செல்ல கடைக்காரர்கள் ஒதுக்கிவைப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
குடியிருப்பு வட்டாரங்களுக்கு இத்தகைய உணவுப்பொருள்களை மற்றோர் அமைப்பான ஃபிரிட்ஜ் ரீஸ்டோக் கம்யூனிட்டி எஸ்ஜியைச் சேர்ந்த தொண்டூழியர்கள் அன்றாடம் விநியோகிக்கின்றனர்.