மேலும் பல நடமாடும் தடுப்பூசி நிலையங்கள் திறக்கப்படும்

மேலும் பல நடமாடும் தடுப்பூசி நிலையங்கள் திறக்கப்படும்

2 mins read
cc51c091-1b44-4c60-a5c0-bcaa5e2f7724
இரண்டாவது கூடுதல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும் 78 வயது சுபத்ரா நாயர் (வலது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மூத்­தோர் கொவிட்-19 தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்ள ஏது­வாக தீவு முழு­வ­தும் 50 புதிய நட­மா­டும் தடுப்­பூசி நிலை­யங்­கள் வரை அமைக்­கப்­படும். அவற்­றில் முதல் மூன்று நிலை­யங்­கள் நேற்று திறக்­கப்­பட்­டன.

ஈசூன் சென்ட்­ர­லில் உள்ள நீ சூன், தெலுக் பிளாங்கா, சாய் சீயில் உள்ள அன்­சார் ஆகிய இடங்­களில் இந்­தப் புதிய நிலை­யங்­கள் நேற்று முதல் செயல்­ப­டத் தொடங்­கின.

அந்த 50 நிலை­யங்­களில் 39 நிலை­யங்­கள் உறு­திப்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளன. ஜூலை இறு­திக்­குள் அவை படிப்­ப­டி­யா­கத் திறக்­கப்­படும். இவற்­றில் பெரும்­பா­ல­னவை வசிப்­போர் குழு நிலை­யங்­களில் அமைந்­தி­ருக்­கும்.

பிஏ.4, பிஏ.5 ஓமிக்­ரான் துணைத் திரி­பு­க­ளால் கொவிட்-19 தொற்று அதி­க­ரித்­து­வ­ரும் வேளை­யில், இந்த நட­மா­டும் தடுப்­பூசி நிலை­யங்­கள் திறக்­கப்­ப­டு­வ­தற்­கான அறி­விப்பு வெளி­யா­கி­யுள்­ளது.

பெரும்­பா­லும் மூத்­தோர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வ­தற்­காக இந்த நிலை­யங்­கள் செயல்­பட்­டா­லும், மற்ற வய­தி­ன­ரும் அங்கு சென்று தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­லாம்.

திங்­கட்கி­ழமை முதல் வெள்ளிக்­கி­ழமை வரை காலை 9 மணி முதல் 11.30 மணி வரை­யி­லும் பிற்­பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை­யி­லும் இந்த நிலை­யங்­கள் செயல்­படும். கடை­சிப் பதிவு மாலை 5 மணிக்கு இடம்­பெ­றும். இந்த நிலை­யங்­கள் ஃபைசர்-பயோ­என்­டெக் தடுப்­பூ­சியை வழங்­கு­கின்­றன.

இந்த நிலை­யங்­களில் மொத்­தம் 25 நட­மா­டும் தடுப்­பூ­சிக் குழுக்­கள் சுழற்சி அடிப்­ப­டை­யில் இயங்­கும்.

மூத்­தோ­ரில் 80,000 பேர் தங்­களின் முதல் கூடு­தல் (பூஸ்­டர்) தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ள­வில்லை என்று சுகா­தார அமைச்சர் ஓங் யி காங் சென்ற வாரம் தெரி­வித்­தி­ருந்­தார். அந்த எண்­ணிக்கை 70,000க்குக் குறைந்­துள்­ள­தாக நேற்று அவர் கூறி­னார்.

நீ சூன் சென்ட்­ர­லில் உள்ள நட­மா­டும் தடுப்­பூசி நிலை­யத்­தைப் பார்­வை­யிட்ட பிறகு செய்­தி­யா­ளர்­களி­டம் அவர் பேசி­னார். துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங்­கும் அவ­ரு­டன் இருந்­தார்.

மூத்­தோர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வ­தில் நட­மா­டும் தடுப்­பூசி நிலை­யங்­களும் குழுக்­களும் முக்கிய உத்­தி­யா­கத் திகழ்­வ­தாக அமைச்­சர் ஓங் சொன்­னார்.

80 மற்­றும் அதற்கு மேற்­பட்ட வய­து­டைய மூத்­தோர் நான்­கா­வது தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்ள பரிந்­து­ரைக்­கப்­ப­டு­கிறது. 80 வய­துக்­குக் குறை­வா­னோர், முதல் பூஸ்­டர் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்ட ஒன்­பது மாதங்­க­ளுக்­குப் பிற­கும் பாது­காப்புடன் இருப்பர். என்­றா­லும், மூத்­தோ­ரு­டன் வசிப்­போர், அடிக்­கடி வெளி­நா­டு­களுக்குப் பய­ணம் செய்­வோர், மருத்­து­வப் பிரச்­சினை உடை­யோர் ஆகி­யோர் இரண்­டா­வது பூஸ்­டர் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ள­லாம் என்று அமைச்­சர் ஓங் தெரி­வித்­தார்.

முத­லிரு கொவிட்-19 தடுப்­பூ­சி­களை மட்­டும் போட்­டுக்­கொண்ட மூத்­தோ­ரு­டன் ஒப்­பு­நோக்க, பூஸ்­டர் தடுப்­பூ­சி­யை­யும் போட்­டுக்­கொண்ட மூத்­தோர் கொவிட்-19 கார­ண­மாக உயி­ரி­ழப்­ப­தற்­கான அல்­லது கடு­மை­யாக நோய்­வாய்ப்­ப­டு­வ­தற்­கான சாத்­தி­யம் குறைவு என்று அமைச்­சர் ஓங் கடந்த வாரம் கூறி­யி­ருந்­தார்.

அடுத்த கொவிட்-19 அலை ஏற்­ப­டு­வ­தற்கு முன்பு தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ளு­மாறு மூத்­தோ­ரி­டம் அவர் வலி­யு­றுத்­தி­னார்.