மகளுக்கு போதைப்பொருள் வழங்கிய மாதுக்குச் சிறை

அணுக்க உறவை ஏற்படுத்திக் கொள்ளும் நடவடிக்கையாக, வீட்டில் இருந்த தம்முடைய 17 வயது மகளுக்கு போதைப்பொருள் வழங்கிய 37 வயது மாது ஒருவருக்கு நேற்று ஏழு ஆண்டு, மூன்று மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் 20ஆம் தேதி இந்தக் குற்றம் நிகழ்ந்தது. போதைப்பொருள் தொடர்பாக மேலும் பல குற்றங்களையும் அவர் புரிந்தார்.

போதைப் பொருள் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் மூன்று குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். அந்த மாதின் பெயரை வெளியிட்டால் அவருடைய மகளின் அடையாளம் தெரிந்துவிடக்கூடும் என்பதால், அவர் பெயர் வெளியிடப்படவில்லை. பதினெட்டு வயதுக்குக்கீழ் உள்ளோர் சிறார், இளையர் சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்படுகின்றனர்.

தம் மகளிடம் 'ஐஸ்' போதைப்பொருளை வழங்கி வீட்டில் அதை உட்கொள்ள அந்த மாது அனுமதித்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஜோசஃப் குவீ நீதிமன்றத்தில் நேற்று கூறினார். கடந்த ஆண்டு மார்ச் 22ஆம் தேதி இரவு 11 மணியளவில், மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் தாயும் மகளும் கைது செய்யப்பட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!