கடந்த மே மாதம் 31ஆம் தேதி நிலவரப்படி, நோவாவேக்ஸ் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டோரில் நால்வருக்குப் பின்விளைவுகள் ஏற்பட்டன.
ஆனால், அவர்கள் யாரும் மோசமாக நோய்வாய்ப்படவில்லை என்று சுகாதார அறிவியல் ஆணையம் நேற்று தெரிவித்தது.
பாதிக்கப்பட்டோருக்கு சொறி, நெஞ்சுவலி, தலை சுற்றல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. அவர்களில் எவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை.
மே மாதம் மொத்தம் 2,792 நோவாவேக்ஸ் தடுப்பூசிகள் போடப்பட்டிருந்தன. மே 18ஆம் தேதியிலிருந்து நோவாவேக்ஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
நோவாவேக்ஸ் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்களில் எவருக்கும் இதயத் தசை வீக்கம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

