கிளார்க் கீயில் உள்ள 'ஸூக்' இரவு பொழுதுபோக்குக் கூடத்திற்கான நுழைவுச்சீட்டு விற்பனையில் மோசடி நடந்துவருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மோசடியில் சிக்கியோர் மே மாதம் முதல் $2,300 வரை பணத்தைப் பறிகொடுத்திருப்பதாகவும் அது கூறியுள்ளது.
இந்த மோசடி தொடர்பாக இதுவரை குறைந்தபட்சம் 10 புகார்கள் வரப்பெற்றதாகவும் நேற்று அது வெளியிட்ட பொதுமக்களுக்கான எச்சரிக்கைக் குறிப்பில் குறிப்பிட்டது.
சமூக ஊடகத் தளமான டெலிகிராமில் 'எஸ்ஜி கிளப்பிங்' போன்ற குழுக்கள் 'ஸூக்' செல்வதற்கான நுழைவுச்சீட்டுகளை விற்பதாக மோசடிக்காரர்கள் விளம்பரம் செய் வதாகவும் நுழைவுச்சீட்டுக்கான பணம் செலுத்திய பின்னர் அவர்கள் தலைமறைவாகிவிடுவதாகவும் அது தெரிவித்தது.
அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடம் மட்டும் நுழைவுச்சீட்டுகளை வாங்குமாறு பொதுமக்களை காவல்துறை கேட்டுக் கொண் டுள்ளது. அதிலும், மலிவு விலை நுழைவுச்சீட்டுகளை இணை யம் மூலம் வாங்குவது ஆபத்தானது என்றது அது.
'ஸூக்' பொழுதுபோக்குக் கூடத்திற்கான நுழைவுச்சீட்டுகள் சில சமயங்களில் எளிதில் கிடைப்பதில்லை.
குறிப்பாக, பிரபலமானவர்கள் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாக வரும்போது அதற்கான நுழைவுச்சீட்டுக்குத் தட்டுப்பாடு நிலவும். மோசடிக்காரர்கள் இதனைச் சாதமாகப் பயன்படுத்திக்கொண்டு ஏமாற்று வேலையில் இறங்குவர். நுழைவுச்சீட்டு வெவ்வேறு விலையில் விற்கப்படுவது வழக்கம்.
வரும் சனிக்கிழமைக்கான நுழைவுச்சீட்டின் விலை $40 முதல் $50 வரை விற்கப்படுகிறது.