சிங்கப்பூரில் அடுத்த கொவிட்-19 அலை எதிர்பார்த்ததைவிட முன்கூட்டியே தாக்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
ஜூன் மாத விடுமுறையின்போது அதிகமானோர் ஐரோப்பா உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டதால், தொற்று எண்ணிக்கை அதிகரித்ததாக அவர் கூறினார்.
ஆனால் பிப்ரவரி மாதம் ஏற்பட்ட ஓமிக்ரான் அலையைவிட இம்முறை நிலைமை அவ்வளவு மோசமாக இருக்காது என்றார் அமைச்சர்.
தமது அமைச்சு நிலைமையை அணுக்கமாக கண்காணித்து வருவதாக திரு ஓங் தெரிவித்தார்.
புதிய ஓமிக்ரான் கிருமி வகைகள், ‘பிஏ.1, பிஏ.2’ வகைகள் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க மூன்று தடுப்பூசிகள் தேவை என்றார் அமைச்சர். கூடுதல் தடுப்பூசி போடாத முதியவர்களை அதை போட்டுக்கொள்ளுமாறு தி ஓங் கேட்டுகொண்டார்.