சிங்கப்பூரில் ஓரினச் சேர்க்கையாளர்கள் மீது வழக்கு தொடுப்பதில்லை

சிங்கப்பூரில் ஓரினச் சேர்க்கையாளர்கள் மீது வழக்கு தொடுப்பதில்லை

1 mins read
0b85535a-b637-4a76-a72c-846830490340
-

ஓரி­னச் சேர்க்­கை­யா­ளர்­கள் மீது வழக்­குத் தொடுப்­ப­தில்லை என்­பது சிங்­கப்­பூ­ரில் உள்ள நிலை என்று பிபிசி ெசய்­தி­யா­ளர் ஸ்டிவன்­ சாக்கர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு சட்ட, உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­கம் பதில் அளித்­துள்­ளார்.

சமூ­கத்­தின் மனப்­போக்கு மாறி­வ­ரு­வ­தால் மக்­கள் தொகை­யில் பெரும் பகு­தி­யி­னர் இந்­தச் சட்­டத்தை ரத்து செய்ய விரும்­ப­வில்லை என்­ப­தால் இத்­த­கைய அணு­கு­முறை எடுக்­கப்­பட்டு உள்­ளது என்று அவர் விளக்­கம் அளித்­தார்.

ஓரி­னச் சேர்க்­கை­யா­ளர்­களை தண்­டிக்க வகை செய்­யும் குற்­ற­வி­யல் சட்­டப் பிரிவு 377ஏ பற்றி சாக்கர் கேள்வி எழுப்­பி­னார்.

சமூக மனப்­பான்­மை­யில் குறிப்­பி­டத்­தக்க மாற்­றம் ஏற்­பட்­டால் இந்­தச் சட்­டம் விலக்­கிக் கொள்­வதை எதிர்­பார்க்­க­லாமா என்­றும் அவர் கேட்­டார்.

தற்­போது இதற்கு இறு­தி­யான பதி­லைத் தர முடி­யாத நிலை­யில் இருப்­ப­தாக அமைச்­சர் சண்­மு­கம் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் இன­வா­தம் குறித்­தும் சாக்கர் கேள்வி கேட்­டார்.

இதற்­குப் பதில் கூறிய அமைச்­சர், இன­வா­தம் சிங்­கப்­பூ­ரில் இல்லை என்று கூறுவ­தற்­கில்லை. பெரும்­பா­லான சமூ­கத்­தில் இருப்­பது போன்று இங்­கும் உள்­ளது என்­றார். ஆனால் எந்த அள­வுக்கு இன­வா­தம் இருக்­கிறது என்­பதை கவ­னிக்க வேண்­டும். சிறு­பான்மை யின­ராக என்­னு­டைய சொந்த அனு­ப­வத்­தி­லும் மற்­ற­வர்­க­ளின் அனு­ப­வத்­தி­லும் மொத்­த­மாக பார்த்­தால் இதர சமூ­கங்­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் சிங்­கப்­பூ­ரில் இது மிக­வும் குறைவு," என்று அவர் குறிப்­பிட்­டார்.