காவல்துறை அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை

காவல்துறை அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை

1 mins read
d6dbd5c1-e0d2-45d7-977c-ed6da22e7b0b
டிரேசி லிம் பதிவேற்றியஅதிகாரியின் புகைப்படம். -

சட­லம் மறைத்து வைக்­கப்­பட்ட கூடா­ரத்­தின் முன்பு புகைப்­ப­டத்­திற்கு காட்­சி­ய­ளித்த காவல்­துறை அதி­காரி மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வி­ருக்­கிறது.

சமூக ஊட­கத்­தில் பர­விய புகைப்­ப­டங்­களில் அவர் 'வி' என்று தனது கையை உயர்த்­திக் காட்­டு­கி­றார்.

காவல்­துறை சுற்றிவளைக்­கப்­பட்ட பகு­தி­யில் சட­லம் நீல நிற கூடா­ரம் போட்டு மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தது. அப்­போது அங்கு இருந்த காவல்­துறை அதி­காரி ஒரு­வர் புகைப்­ப­டத்­திற்கு காட்­சி­ய­ளித்­துள்­ளார்.

இம்­மா­தம் 28ஆம் தேதி செவ்­வாய்க்­கி­ழமை இந்­தச்­ சம்­ப­வம் நடந்­துள்­ளது.

புளோக்­கின் அடி­யில் ஒரு பெண் அசை­வற்­றுக் கிடந்த சம்­ப­வத்தை காவல்­து­றை­யி­னர் இயற்­கைக்கு மாறான மர­ண­மாக வகைப்­ப­டுத்­தி­யி­ருந்­த­னர்.

"அதி­காரி தன்­னைத் தானே புகைப்­ப­டம் எடுத்­துக் கொள்­ள­வில்லை.

"ஆனால் மற்­ற­வர்­கள் முன்­னி­லை­யில் முறை­யற்ற வகை­யில் அவர் நடந்­து­கொண்­டார்," என்று ஃபேஸ்புக் பதி­வில் காவல்­துறை தெரி­வித்­தது.

அந்த அதி­காரி மீது துறை ரீதி­யாக ஒழுங்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வி­ருக்­கிறது.

சம்­ப­வத்­தில் இறந்த பெண் தனது அத்தை என்று கூறிய ஃபேஸ்புக் பதி­வா­ள­ரான டிரேசி லிம், அந்த அதி­கா­ரி­யின் புகைப்­ப­டத்தை பதி­வேற்றி ஏற்­றுக்­கொள்ள முடி­யாத, அவ­ம­திக்­கும் வகை­யில் இருப்­ப­தா­கத் தெரி­வித்­தி­ருந்­தார்.

"இறந்­த­வ­ருக்கு அடிப்­படை மரி­யா­தை­யைக்­கூட காட்­டா­மல் ஏதோ கோப்­பையை வென்­ற­து­போல அவர் காட்­சி­ய­ளித்­துள்­ளார்," என்­றும் அவர் பதி­விட்­டி­ருந்­தார்.

இதன் பிறகு புதன்­கி­ழமை மதி­யம் வெளி­யிட்ட ஃபேஸ்புக் பதி­வில் காவல்­து­றை­யி­னர் தன்னை அழைத்து மன்­னிப்­புக் கேட்­டுக் கொண்­ட­தா­க­வும் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுத்­ததை தான் பாராட்­டு­வ­தா­க­வும் டிரேசி லிம் குறிப்­பிட்­டி­ருந்­தார்.