அரசாங்கத்தின் அதிகாரபூர்வ 'வாட்ஸ்அப்' தகவல்வழியான 'கவ்.எஸ்ஜி' மூத்தோர் 'பூஸ்டர்' தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
60ம் அதற்கு மேலும் வயதானவர்கள் உடனடியாக முதல் 'பூஸ்டர்' தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ளும்படியும் 80ம் அதற்கு மேலும் வயதானவர்களும் மருத்துவக் காரணங்களால் எளிதில் பாதிக்கப்படக்கூடியோரும் இரண்டாவது 'பூஸ்டர்' தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும்படியும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முதல் 'பூஸ்டர்' செலுத்தி ஐந்து மாதங்களான பிறகு இரண்டாவது 'பூஸ்டர்' தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். நேற்று 'வாட்ஸ்அப்' தகவல்வழியில் வெளியான இந்த ஆலோசனை அரசாங்கத்தின் 'டெலிகிராம்' பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
50 முதல் 79 வயதானோர் இரண்டாவது 'பூஸ்டர்' தடுப்பூசி குறித்துப் பரிசீலிக்கலாம்.
சிங்கப்பூரில் 60 வயதும் அதற்கும் மேற்பட்ட கிட்டத்தட்ட 70,000 பேர் இன்னும் முதல் 'பூஸ்டர்' தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளவில்லை.

