டென்மார்க்கைச் சேர்ந்த கிளாஸ் நிகோலஜ்சென், தன் மனைவியிடம் மூச்சுக் காற்றில் மதுபானத்தின் அளவை மதிப்பிடும் சோதனையை நடத்தவந்த அதிகாரிகளிடம் தவறான தகவல் அளித்ததற்காக அவருக்கு ஒரு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவரது மனைவி லியு சியா, 2019ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி நண்பர்களுடன் 'செந்தோசா கோல்ஃப் கிளப்'பில் மது அருந்திவிட்டு இரவு ஒன்பதரை மணியளவில் காரில் வீடு திரும்பினார். வழியில் ஆலன்புரூக் ரோட்டில் விளக்குக் கம்பத்தில் அவர் மோதியதாகக் கூறப்பட்டது.
மறுநாள் இதுகுறித்து விசாரிக்கச் சென்ற காவல்துறை அதிகாரிகளிடம் மனைவி வீட்டில் இல்லை என்றும் 'ஹாலந்து வில்லேஜ்' சென்றிருப்பதாகவும் நிகோலஜ்சென் பலமுறை பொய் சொன்னார்.
பொய் கூறியதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட அவர் தண்டனை குறித்து மேல்முறையீடு செய்யப்போவதாகக் கூறப்பட்டுள்ளது.

