சிங்கப்பூரின் வடக்குப் பகுதியில் வசிக்கும் 2,500 குடியிருப்பாளர்
களிடம் தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமத்தின் ஓர் அங்கமான ஈசூன் ஹெல்த் ஆய்வு நடத்துகிறது. இந்த ஆய்வு இம்மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் நிறைவுபெறும்.
மண்டாய், செம்பவாங், சிம்பாங், உட்லண்ட்ஸ், ஈசூன் ஆகிய வட்டாரங்களில் வசிப்போரில் 2,500 பேரிடம் இந்த மக்கள்தொகை சுகாதார ஆய்வு நடத்தப்படும்.
குடியிருப்பாளர்களின் சுகாதாரப் பராமரிப்புத் தேவைகளையும் சேவைகளை நாடும்போது அவர்களுக்கு ஏற்படும் அனுபவங்கள் குறித்தும் அறிந்துகொள்ள இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. இதன்மூலம் குடியிருப்பாளர்களுக்கு வழங்கும் சேவைகளை மேம்படுத்தி அவர்
களுக்கு உயர்தரப் பராமரிப்புச் சேவை வழங்க ஈசூன் ஹெல்த் முனைப்புடன் உள்ளது.
ஈசூன் ஹெல்த் கட்டமைப்பில் அட்மிரல்ட்டி மருத்துவ நிலையம், கூ டெக் புவாட் மருத்துவமனை, ஈசூன் சமூக மருத்துவமனை ஆகியவை அடங்கும்.
ஆய்வில் பங்கெடுக்கத் தேர்ந்தெடுக்கப்படாதவர்களும் தங்கள் ஆரோக்கியநிலை குறித்த
தகவலைப் பகிர்ந்துகொள்ள விரும்பினால் அதற்காகவே ஏற்பாடு செய்யப்படும் குவிநோக்குக் குழு கலந்துரையாடல்களில் பங்கெடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
"ஏற்கெனவே நடப்பில் உள்ள சுகாதாரப் பராமரிப்பு அணுகுமுறையையும் நிர்வாகத் தரவுகளையும் ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்புகள் மேம்படுத்தும்.
"மக்கள்தொகையின் தற்
போதைய, எதிர்கால சுகாதார மற்றும் சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதற்கான திட்டமிடுதலுக்கு இந்த ஆய்வு உதவும்," என்று ஈசூன் ஹெல்த்தின் தலைமை நிர்வாகி சுவா ஹோங் சூன் கூறினார்.
'ஹெல்த்தியர் எஸ்ஜி' உத்திமுறை என்று அழைக்கப்படும் தேசிய நோய் வரும்முன் காக்கும் திட்டம் பற்றி சுகாதார அமைச்சர் ஓங் யி காங் இவ்வாண்டு தொடக்கத்தில் அறிவித்தார். அதையடுத்து, இந்த ஆய்வு நடத்தப்படுகிறது.
நோயாளிகளை மையமாகக் கொண்ட நோய் வரும்முன் காக்கும் பராமரிப்புக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
இதன்மூலம் நாள்பட்ட நோய்களும் சுகாதாரப் பிரச்சினைகளும் முற்றுவதற்கு முன்பு கண்டறியப்படும். இந்தப் புதிய அணுகுமுறையின் ஒரு பகுதியாகப் புதிய நடவடிக்கைகளைச் சுகாதார அமைச்சு நடைமுறைப்படுத்தும். உதாரணத்துக்கு, குடும்ப மருத்துவர் ஒருவருடன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பதிவு செய்துகொள்ள ஊக்குவிக்கப்படுவர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட குடியிருப்பாளர்களை ஆய்வு நடத்துவோர் அணுகும்போது அதில் பங்கேற்குமாறு ஈசூன் ஹெல்த்தின் தலைமை ஆய்வாளர் இணைப் பேராசிரியர் இங் யுக் ஃபான் கேட்டுக்கொண்டார்.
"குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்படும் சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளில் ஏதேனும் குறை
பாடுகள் இருந்தால் அதை அடையாளம் காண ஆய்வு மூலம்
சேகரிக்கப்படும் தகவல்கள் உதவும். இதன்மூலம் பராமரிப்புச் சேவையின் தரத்தை மதிப்பீடு செய்து அதை மேம்படுத்த இந்த அணுகுமுறை வழிவகுக்கும்.
"அத்துடன், மக்கள்தொகையின் ஆரோக்கியநிலையை உயர்த்த, இருப்பில் உள்ள வளங்களை நன்கு பயன்படுத்திக்கொள்ளவும் இத்
திட்டம் உதவும்," என்று இணைப்பேராசிரியர் இங் கூறினார்.
இந்த ஆய்வு குறித்த மேல் விவரங்களுக்கு 6602 2862 எனும் தொலைபேசி எண்ணை அழைக்கலாம். அல்லது yishunhealth.hsse@ktph.com.sg எனும் மின்னஞ்சல் முகவரி மூலம் மின்னஞ்சல் அனுப்பலாம்.

