தேசிய தொழிற்சங்க காங்கிர
சின் (என்டியுசி) துணைத்
தலைமைச் செயலாளராக பிரதமர் அலுவலகத் துணை அமைச்சர் டெஸ்மண்ட் டான் நியமிக்கப்
பட்டுள்ளார்.
இதற்கு முன்பு அப்பதவியை போக்குவரத்து, நிதி மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் வகித்தார். தற்போது திரு சீ முழுநேர அரசாங்கச்
சேவைக்குத் திரும்பியுள்ளார்.
தொழிலாளர் இயக்கத்தில் இணைந்துள்ள திரு டான், உள்துறை மற்றும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற துணை அமைச்சர் பதவியிலிருந்து
விலகியுள்ளார்.
என்டியுசியின் பயிற்சி, உருமாற்றக் குழுமத்தின் இயக்குநராக திரு டான் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இக்குழுவில் தொழில்துறைப் பயிற்சி மற்றும் உருமாற்றப் பிரிவு, வேலை நியமனம் மற்றும் வேலை வாய்ப்புப் பயிற்சிக் கழகம்,
என்டியுசி கற்றல் மையம், ஓங் டெங் சியோங் தொழிலாளர் தலைமைப் பயிற்சிக் கழகம் ஆகியவை இடம்பெறுகின்றன.
சிங்கப்பூர் தொழில், சேவைத்துறை ஊழியர்கள் சங்கத்தின் ஆலோசகராகவும் திரு டான் கடந்த மாதம் 28ஆம் தேதி நியமிக்கப்பட்டதாக என்டியுசி கூறியது. சங்கத்தின் நிர்வாகச் செயலாளராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

