ஈராண்டுக்குப் பிறகு சிங்கப்பூர்-டெசாரு படகுச் சேவை சரளமாகத் தொடங்கியது

ஈராண்டுக்குப் பிறகு சிங்கப்பூர்-டெசாரு படகுச் சேவை சரளமாகத் தொடங்கியது

2 mins read
edf1bc97-3231-4fda-b2a7-20e57863d59e
தானா மேரா படகு முனையத்தில் படகில் ஏறி பயணி கள் நேற்று டெசாரு சென்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஈராண்­டு­க­ளுக்­கும் மேலாக இடம்­பெறா­மல் இருந்­து­வந்த சிங்­கப்­பூர்- டெசாரு பட­குச் சேவை நேற்று மீண்­டும் சர­ள­மா­கத் தொடங்­கி­யது.

இரு­வழி பய­ணத்­திற்­குக் கட்­டணம் $118. ஒரு­வழி பய­ணத்­திற்கு $70 செலுத்த வேண்­டும். 'பாத்­தாம் ஃபாஸ்ட்' என்ற நிறு­வ­னம் அந்­தப் பட­குச் சேவையை நடத்­து­கிறது.

ஜூலை 7ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 6ஆம் தேதி­வரை இணையத்தளம், சமூக ஊட­கங்­கள் வழி முன்­ப­திவு செய்­வோ­ருக்கு இரு­வ­ழிக் கட்­ட­ண­மாக $98 வசூ லிக்­கப்­படும்.

பட­கில் 330 பேர் செல்­ல­லாம். வியா­ழன் முதல் ஞாயி­று­வரை சிங்­கப்­பூரை விட்டு படகு காலை 8.30 மணிக்­குப் புறப்­படும். டெசா­ருவை விட்டு மாலை 5.30க்குக் கிளம்­பும். ஒரு பய­ணத்­திற்கு ஏறக்­கு­றைய 90 நிமி­டங்­கள் ஆகும்.

தொற்­றுக்கு முன், பய­ணி­கள் சாங்கி படகு முனை­யத்­தில் இருந்து புறப்­பட்டு பட­கில் 30 நிமி­டம் பயணம் செய்து ஜோகூ­ரில் உள்ள கோத்தா திங்­கி­யில் இருக்­கும் தஞ்சோங் பெலாங்­கோர் படகு முனை­யத்­தைச் சென்று அடை­வர்.

அங்­கி­ருந்து வாக­னத்­தில் 30 முதல் 45 நிமி­டங்­களில் டெசாரு சென்­றனர்.

கொரோனா கார­ண­மாக அந்­தப் பட­குச் சேவை 2020ஆம் ஆண்டு மார்ச் முதல் நிறுத்­தப்­பட்­டது.

பய­ணி­கள் பேருந்து மூல­மா­கவும் டெசாரு செல்­ல­லாம். இந்­தப் பய­ணத்­திற்குப் போக்­கு­வ­ரத்து, சுங்­கச்­சா­வடி நில­வ­ரங்­க­ளைப் பொறுத்து 2.5 மணி நேரம் ஆகும்.

இத­னி­டையே, பட­குச்சேவைக்கு நல்ல ஆத­ரவு இருப்­ப­தாக பாத்­தாம் ஃபாஸ்ட் நிறு­வ­னத்­தின் பேச்­சா­ளர் கூறி­னார்.

கட­வுச்­சீட்டு, நுழைவு அனு­மதி (விசா), அனு­ம­திச் சீட்­டு­கள், தடுப்­பூசி சான்­றி­தழ் போன்ற செல்­லு­படியாகக்­கூ­டிய ஆவ­ணங்­க­ளு­டன் பய­ணி­கள் செல்ல வேண்­டும்.