பிள்ளைகளை அடித்துத் துன்புறுத்திய தாயாருக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மூன்று பிள்ளைகளுக்குத் தாயான அப்பெண் 2020ஆம் ஆண்டில் தமது மகனையும் மகளையும் அடித்துத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
அப்பெண் சிறையில் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டு பிறகு மனநலக் கழகத்துக்கு அனுப்பப்பட்டதாக அரசுத்தரப்பு வழக்
கறிஞர் கூறினார்.
அப்பெண் அந்தக் குற்றங்
களைப் புரிந்தபோது அவருக்கு 'ஸ்கிட்சோஃபிரினியா' எனப்படும் மனநோய் இருந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருக்குத் தண்டனை விதிக்கப்படவில்லை.
மனநோய் காரணமாக அவர் தமது பிள்ளைகளை அடித்ததாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
மாறாக, அவருக்கு நீதிமன்றம் கடுமையான எச்சரிக்கை விடுத்தது. இதே குற்றங்களின் பேரில் அவர் மீது மீண்டும் குற்றம் சுமத்த முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது.