தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெருங்கடல் வாழ்விட சூழல் மேம்பட சிங்கப்பூரின் 9 செயல்திட்டங்கள்

2 mins read
6a560bdf-8c1a-4d19-99f1-c07739746a28
-

பெருங்­க­டல் உயி­ரி­னங்­கள் வாழ்விட சுற்­றுச்­சூழ­லைப் பாது­காக்க சிங்­கப்­பூர் பல்­வேறு முயற்சி­களை எடுத்­து­வ­ரு­கிறது.

கட­லில் பவ­ளப்­பாறை வளர்ச்சிக்கு சூரிய மின் சக்­தி­யைப் பயன்­ப­டுத்த முடி­யுமா என்­பதைக் கண்­ட­றிய நடத்­தப்­படும் ஓர் ஆய்வும் அந்த முயற்­சி­களில் இடம்­பெ­றும்,

சிங்­கப்­பூர் கடல்­ப­கு­தி­களில் மிகக் குறைந்த சக்­தி­யு­டன் மின்­சா­ரத்­தைப் பயன்ப­டுத்தி பவ­ளப்­பாறை வளர்ச்­சிக்கு உத­வு­வது சாத்­தி­யமா என்­பதை ஆராய்­வது அந்த ஆய்­வுத் திட்­டத்­தின் நோக்­கம் என்று தேசிய பூங்­காக் கழ­கத்­தின் தேசிய உயி­ரி­யல் பன்­மைய நிலை­யத்­தின் ஓர் இயக்­கு­ந­ரான டாக்­டர் கரீன் டுன் தெரி­வித்­தார்.

கட­லில் செழித்து வளர்ந்து பெருகும் பவ­ளப்­பாறைகள், கடல் வாழ்விட சுற்­றுச்­சூ­ழல் நடை­மு­றை­களுக்கு உறு­து­ணை­யாக இருந்து உத­வுவதாக அவர் கூறி­னார்.

நடத்­தப்­படும் ஆய்வு மூலம் தெரிய வரு­பவை, ஒரே மாதி­ரி­யான கடல் பகு­தி­களில் பவ­ளப்­பா­றை­களை மீட்­டெ­டுக்­கும் முயற்­சி­களுக்கு உத­வும் என்று டாக்­டர் டுன் குறிப்­பிட்­டார்.

பெருங்­க­டல் வாழ்­விட சுற்­றுச்­சூ­ழலை மேம்­ப­டுத்த சிங்­கப்­பூர் ஒன்­பது புதிய செயல்­திட்­டங்­களை மேற்­கொள்­கிறது. அவற்­றில் அந்த ஆய்வு ஒன்று.

வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் சென்ற மாதம் போர்ச்­சுக்­கலில் நடந்த ஐநா பெருங்­கடல் மாநாட்­டில் கலந்­து­கொண்டு பேசியபோது அந்த ஒன்­பது செயல்­திட்­டங்­கள் பற்றி அறி­வித்­தார்.

கரி­மக் கழி­வு­களை அதி­கம் வெளி­யி­டும் கடல்­து­றை­களின் கரிம அள­வைக் குறைப்­பது, சுற்­றுச்­சூழல் பயிற்சிப் படிப்பு ஆகி­ய­வை­யும் அச்செயல்­திட்­டங்­களில் அடங்­கும்.

சிங்­கப்­பூர் சிறு தீவு. கடல் சார்ந்த நகர நாடு. சிங்­கப்­பூ­ரின் வர­லாறு, மக்­கள், பொரு­ளி­யல் ஆகி­ய­வற்­றைப் பெருங்­க­டலை விட்டு­விட்டு பிரித்துப் பார்க்க இயலாது என்று அமைச்­சர் தான் ஆற்­றிய உரை­யில் குறிப்­பிட்டார்.

சிங்­கப்­பூர் உயிர்­ப்பித்து இருப்­பதும் அதன் செழிப்­பும் பெருங்­கடலைச் சார்ந்­துள்­ளது.

உணவு, வேலை வாழ்­வா­தாரத்தை பெருங்­க­டல் வழங்­கு­கிறது. உலக வர்த்­த­கத்­திற்கு உறுதுணை­யாக உள்­ளது. பரு­வ­நிலை, தண்­ணீர் ஓட்­டம் ஆகி­ய­வற்­றில் மிக­முக்­கிய பங்­காற்­றும் பெருங்­க­டல், உயி­ரி­யல் பன்­ம­யத்­தின் வள­மா­க­வும் திகழ்­கிறது என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

பெருங்­க­ட­லைக் கெடா­மல் பாது­காப்­ப­தும் சுற்­றுச்­சூ­ழ­லுக்­குப் பாதிப்பு இல்­லா­மல் அதைப் பயன்­படுத்­து­வ­தும் அனைத்­து­லக சட்டத்­தின்­கீழ் இடம்­பெற வேண்­டும்.

தக­வல்­களை­யும் அறி­வி­ய­லை­யும் அடிப்­படை­யா­கக் கொண்டு அத்­த­கைய முயற்­சி­கள் இடம்பெற வேண்­டும். பெருங்­க­டல் வாழ்­வி­டச் சூழ­லைப் பாது­காக்க பல­த­ரப்பு ஒத்­து­ழைப்பு தேவைப்­ப­டு­கிறது என்று அமைச்­சர் தெரி­வித்­தார்.

சிறிய நாடான சிங்­கப்­பூர் தன் பங்கை ஆற்றி வரு­கிறது என்று குறிப்­பிட்ட டாக்­டர் பால­கி­ருஷ்­ணன், ஐநா­வுக்­கான சிங்­கப்­பூ­ரின் புதிய தன்­னார்வ கடப்­பா­டு­க­ளை­யும் அறி­வித்­தார்.