1.5 மி. சிங்கப்பூரர்களுக்கு $700 வரை ரொக்கம்

2 mins read
f736529d-4523-4c77-a5b5-239276a5c883
-

விரி­வு­ப­டுத்­தப்­பட்ட பொருள், சேவை வரி பற்­றுச்­சீட்­டு­கள் திட்­டத்­தின்­கீழ் அடுத்த மாதம் சிறப்பு வழங்­கு­தொ­கை­கள் அளிக்­கப்­படும் என்று நிதி­ய­மைச்சு தெரி­வித்­துள்ளது.

ஏறக்­கு­றைய ஒன்­றரை மில்­லி­யன் சிங்­கப்­பூ­ரர்­கள் இதற்­குத் தகுதி­பெ­று­வர். இதன்­கீழ் ஒவ்­வொ­ரு­வருக்­கும் 700 வெள்ளி வரை­யி­லான தொகை வழங்­கப்­படும்.

துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங், சென்ற மாதம் பொருள், சேவை வரி பற்­றுச்­சீட்­டு­கள் திட்­டம் விரி­வு­கா­ணும் என அறி­வித்தார்.

தகு­தி­பெ­றும் சிங்­கப்­பூ­ரர்­கள் இரண்டு தொகை­க­ளைப் பெற்­றுக்­கொள்­வர். முத­லா­வது ஜிஎஸ்­டிவி ரொக்­கம், அடுத்­தது ஜிஎஸ்­டிவி சிறப்பு ரொக்க வழங்­கு­தொகை.

இந்­தத் திட்­டத்­தின்­கீழ், 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சிங்­கப்­பூ­ரர்­க­ளின் மத்­திய சேம­நிதி மெடி­சேவ் கணக்­கில் 450 வெள்ளி வரை நிரப்­பப்­படும். ஏறத்­தாழ 575,000 பேர் இத­னால் பல­ன­டைவர்.

டிசம்­பர் 31, 1969க்கு முன்­னர் பிறந்த, இது­வரை முன்­னோ­டித் தலை­முறை அல்­லது மெர்­டேக்கா தலை­மு­றை­யி­ன­ருக்­கான சலு­கை­களைப் பெற்­றுக்­கொள்­ளாத சிங்­கப்­பூ­ரர்­க­ளின் மெடி­சேவ் கணக்­கில் 100 வெள்ளி செலுத்­தப்­படும். அடுத்த மாத இறு­திக்­குள் இந்­தத் தொகை நிரப்­பப்­படும்.

குறைந்த வரு­மா­னப் பின்­ன­ணி­யில் இருந்து வரு­வோ­ருக்­கும் முதி­ய­வர்­க­ளுக்­கும் பொருள், சேவை வரிச் செலவு, அதி­க­ரிக்­கும் வாழ்க்­கைச் செல­வி­னம் ஆகி­ய­வற்­றைச் சமா­ளிக்க உத­வும் அர­சாங்க நட­வ­டிக்­கை­யின் ஓர் அங்­கம் இது என்று நிதி­ய­மைச்சு கூறியது.

ஏற்­கெ­னவே இந்த ஆண்­டுத் தொடக்­கத்­தில் இருந்து 'சிடிசி' பற்­றுச்­சீட்­டு­கள், 'ஜிஎஸ்டி யூ சேவ்' பற்­றுச்­சீட்­டு­கள், சேவை, பரா­ம­ரிப்­புக் கட்­ட­ணத் தள்­ளு­படி, மாண­வர்­க­ளின் 'எடு­சேவ்' கணக்கு அல்­லது உயர்­கல்­விக்­கான கணக்­கில் தொகை நிரப்­பப்­பட்­ட­தை­யும் அமைச்சு சுட்­டி­யது.

வரவிருக்கும் மாதங்களில் மேலும் சில வழங்குதொகைகள், பயனீட்டுக் கட்டணத் தள்ளுபடி, குழந்தை மேம்பாட்டுக் கணக்கில் நிரப்புதொகை போன்றவை வழங்கப்படும் என்பதையும் நிதியமைச்சு குறிப்பிட்டது.

பண­வீக்­கம் மக்­க­ளி­டையே ஏற்­ப­டுத்­தும் தாக்­கத்தை அர­சாங்­கம் புரிந்­து­கொண்­டி­ருப்­பதை இது காட்­டு­வ­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் பேசிய பல்­வேறு தரப்­பி­னர் பகிர்ந்­து­கொண்­ட­னர்.

உணவுப்பொருள் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, வாடகை உயர்வு எனச் செலவுகள் அதிகரித்திருப்பதால் இத்தகைய உதவியை அவர்கள் வரவேற்றனர்.

விரிவுகாணும் ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுத் திட்டத்தின்கீழ் ஆகஸ்ட்டில் சிறப்பு வழங்குதொகை