தாயார்மீது கொலைக் குற்றம், தந்தைக்கு ஆயுள் தண்டனை

தாயார்மீது கொலைக் குற்றம், தந்தைக்கு ஆயுள் தண்டனை

2 mins read
3e0b01ce-0d1d-45c0-b237-2f3c4cfc35dc
ரிட்சுவான் மெகா அப்துல் ரஹ்மான்-அஸ்லின் அருஜுனா தம்பதி. படம்: ஃபேஸ்புக் -
multi-img1 of 2

5 வயது சிறுவன்மீது வெந்நீரை ஊற்றி மரணம் விளைவித்த கொடுமை

ஐந்து வயது சிறுவன்­மீது வெந்­நீரை ஊற்றி துன்­பு­றுத்­திய தம்பதிக்கு முன்­ன­தாக விதிக்­கப்­பட்­டி­ருந்த சிறைத் தண்­ட­னையை மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் கடு­மை­யாக்­கி­யுள்­ளது.

அஸ்­லின் அரு­ஜுனா, 30, எனும் அச்­சி­று­வ­னின் தாயார் தற்­போது மரண தண்­டனை அல்­லது ஆயுள் தண்­ட­னையை எதிர்­நோக்­கு­கி­றார். இவர் மீதான கொலைக் குற்­றச்­சாட்டு நிரூ­ப­ண­மா­னதை மேல்­முறை­யீட்டு நீதி­மன்­றம் கண்­ட­றிந்­துள்­ள­தைத் தொடர்ந்து தீர்ப்பு மாற்றி அமைக்­கப்­பட்­டுள்­ளது.

முன்­ன­தாக, அச்­சி­று­வ­னுக்­குக் கடு­மை­யான காயம் விளை­வித்­த­தாக அஸ்­லி­னுக்கு எதி­ராக நான்கு குற்­றச்­சாட்­டு­கள் நிரூ­ப­ண­மாகி இருந்­தன.

ரிட்­சு­வான் மெகா அப்­துல் ரஹ்­மான், 30, எனும் இவ­ரு­டைய கண­வ­ருக்கு இப்­போது ஆயுள் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

முன்­ன­தாக, இத்­தம்­ப­திக்கு தலா 27 ஆண்டு சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டி­ருந்­தது.

கூடு­தல் மனு சமர்ப்­பிப்­புக்­காக இவர்­க­ளு­டைய வழக்கு பிந்­தைய ஒரு தேதிக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்டு உள்­ளது. அஸ்­லி­னுக்கு என்ன தண்­டனை விதிக்­கப்­படும் என்­பது குறித்து பின்­னர் தீர்­மா­னிக்­கப்­படும். முன்­ன­தாக, ரிட்­சு­வா­னுக்கு 24 பிரம்­ப­டி­கள் விதிக்­கப்­படும் என்று அளிக்­கப்­பட்டு இருந்த தீர்ப்பு நிலை­நாட்­டப்­ப­டுமா என்­பது குறித்­தும் முடி­வெ­டுக்­கப்­படும்.

2016 அக்­டோ­பர் 15க்கும் 22ஆம் தேதிக்­கும் இடையே தோ பாயோ­வில் உள்ள தங்­களது ஓரறை வீட்டில் நான்கு தரு­ணங்­களில் இத்­தம்­பதி இவர்­க­ளு­டைய மகன்­மீது வெந்­நீரை ஊற்றி துன்­பு­றுத்­தி­னர்.

கடைசி சம்­ப­வத்­தின்­போது அச்­சி­று­வன் மயங்கி விழுந்­தான். அதி­லி­ருந்து ஏழு மணி நேரம் கழித்த பிறகே இவர்­கள் அச்­சி­று­வனை மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு சென்­ற­னர்.

அச்­சி­று­வ­னின் உடல் படு­மோ­ச­மாக வெந்­து­போ­ன­தைத் தொடர்ந்து, 2016 அக்­டோ­பர் 23ஆம் தேதி அவன் உயி­ரி­ழந்­தான்.

அச்­சி­று­வனை இத்­தம்­பதி மற்ற விதங்­க­ளி­லும் துன்­பு­றுத்­தி­னர். செல்­லப்­பி­ராணி கூண்­டில் அவனை அடைத்து வைத்­தது, குற­டைக் கொண்டு அவ­னது உட­லைக் கிள்­ளி­யது, துடைப்­பத்­தைக் கொண்டு அவனை அடித்­தது, அனலில் வைக்­கப்­பட்ட கரண்­டி­யைக் கொண்டு அவ­னு­டைய உள்­ளங்­கை­யில் சூடு வைத்­தது உள்­ளிட்ட துன்­பு­றுத்­தல் செயல்­களை இவர்­கள் புரிந்­த­னர்.

இத்­தம்­ப­திக்கு மற்ற பிள்­ளை­களும் உள்­ள­னர். நீதி­மன்ற உத்­த­ரவு கார­ண­மாக அச்­சி­று­வன் மற்றும் அவ­னு­டைய உடன்­பி­றப்­பு­க­ளின் பெயர்­கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

முன்­ன­தாக, இத்­தம்­ப­தி­யைக் கொலைக் குற்­றச்­சாட்­டில் இருந்து உயர் நீதி­மன்ற நீதி­பதி விடு­வித்­தார். மாறாக, அச்­சி­று­வ­னுக்­குக் கடு­மை­யான காயம் விளை­வித்­த­தாக இவர்­கள்­மீது குற்­றம் நிரூ­ப­ண­மாகி இருந்­தது.

உயர் நீதி­மன்­றத்­தின் இந்த முடிவை எதிர்த்து அர­சாங்கத் தரப்பு வழக்­க­றி­ஞர்­கள் மேல்­மு­றை­யீடு செய்­த­னர். அஸ்­லி­னுக்கு எதி­ராக கொலைக் குற்­றத்தை நிரூ­பிக்கவும் இத்­தம்­ப­திக்கு ஆயுள் தண்­ட­னையை விதிக்­க­வும் அவர்­கள் கோரி­யி­ருந்­த­னர்.