இறுதிக்கட்டத்தில் உள்ளவர்க்கு சுகந்தரும் சுதந்திரம்

இறுதிக்கட்டத்தில் உள்ளவர்க்கு சுகந்தரும் சுதந்திரம்

1 mins read
8bf0de75-beb0-4ea5-89fb-a4bd74482a9b
குழந்தை முதல் பதின்ம வயது வரையிலான அந்திமகால நோயாளிகளுக்கான அறை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வாழ்க்­கை­யின் இறு­திக்­கட்­டத்­தில் உள்ள நோயா­ளி­கள் புதிய அந்தி­ம­கா­லப் பரா­ம­ரிப்பு இல்­லத்­தில் தங்­க­ளுக்கு விருப்­ப­மான நட­வடிக்­கை­களில் ஈடு­ப­ட­லாம், அங்­குள்ள சேவை­க­ளை­யும் நாட­லாம்.

வழக்­க­மாக முன்­னரே திட்­ட­மி­டப்­பட்ட நட­வ­டிக்­கை­களில்­தான் அவர்­கள் ஈடு­பட முடிந்­தது. ஆனால், ஊட்­ரம் சமூக மருத்­து­வ­ம­னை­யில் 900 சதுர மீட்­டர் அள­வில் அமைந்­துள்ள ஒவே­சிஸ்@ஊட்­ரம் என்ற அந்­தி­ம­காலப் பரா­ம­ரிப்பு நிலை­யத்­தில் அவர்­களே தங்­க­ளுக்கு விருப்­ப­மா­ன­தைத் தேர்­வு­செய்­ய­லாம்.

மற்ற இடங்­களில் இல்­லாத வகையில் உண­வுக்­கூ­ட­மும் பானக்­கூ­ட­மும் இங்கு உள்­ளன.

அந்­தி­ம­கா­லப் பரா­ம­ரிப்­புச் சேவை­க­ளுக்­கான தேவை அண்­மைய ஆண்­டு­களில் அதி­க­ரித்து­வரு­வ­தாக நேற்று ஒவே­சிஸ்@ஊட்­ரம் சென்­றி­ருந்த சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்­தார். தங்­கள் இறுதி நாள்­களி­லும் வாழ்க்­கைத்­த­ரம் மாறாது மக்­கள் வாழ­வேண்­டும் என்­ப­தில் சுகா­தார அமைச்சு கவ­னம் செலுத்தி வரு­வ­தாக திரு ஓங் கூறி­னார். நிலையம் வாரத்தில் ஐந்து நாள்களுக்கு இயங்கும்.