நாட்டிற்குச் சேவையாற்றத் தயாராகும் புதிய மூத்த ராணுவ வல்லுநர்கள்

நாட்டிற்குச் சேவையாற்றத் தயாராகும் புதிய மூத்த ராணுவ வல்லுநர்கள்

2 mins read
061fda71-8d45-44de-ae82-b97de02b69e3
மூத்த ராணுவ வல்லுநராகநியமிக்கப்பட்டுள்ள சாய் சித்தார்த்,25. படம்: தற்காப்பு அமைச்சு -

யுகேஷ் கண்­ணன்

சிறு வய­தில் பல ராணுவ நிகழ்ச்சி­களுக்­குச் சென்­று­வந்த சாய் சித்தார்த், 25, ராணுவ வீரர்­க­ளின் மிடுக்­கை­யும் துடிப்­பை­யும் கண்டு, முழுநேரமாக ராணு­வத்­தில் இணைய வேண்­டும் என்று அப்போதே முடிவு செய்­தார்.

தேசிய சேவைக்­காக 2016ல் ராணு­வத்­தில் இணைந்த சித்­தார்த், அடிப்­படை ராணு­வப் பயிற்­சிக்­குப் பின்பு தலைமை அதி­கா­ரிப் பயிற்­சிக்­குத் தேர்ச்சி பெற்­றார்.

தேசிய சேவைக்கு முன்­னர் சிங்­கப்­பூர் பல­து­றைத் தொழிற்­கல்­லூரி­யில் வேதிப் பொறி­யி­யல் துறை­யில் பட்­ட­யப் படிப்பை முடித்தி­ருந்த அவர், தலைமை அதி­கா­ரிப் பயிற்­சிக்­குப்­பின் ராணு­வப் பொறி­யா­ளர் பிரி­வில் பணி­ய­மர்த்­தப்­பட்­டார்.

ராணு­வம், பொறி­யி­யல் ஆகிய இரு­து­றை­க­ளி­லும் தனக்­குள்ள ஈடு­பாட்­டை­யும் திறன்­க­ளை­யும் செயல்­படுத்­தும் வகை­யில் அப்­பணி அமைந்­த­தால், அதை முழு­நே­ர­மாக மேற்­கொள்ள சித்­தார்த் முடி­வெடுத்­தார். எனவே, தேசிய சேவைக்­குப் பின்­னர், நன்­யாங் தொழில்­நுட்­பக் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் இயந்­தி­ரப் பொறி­யி­யல் துறை­யில் இள­நி­லைப் பட்­டக் கல்­வி­யைத் தொடர அவ­ருக்கு ராணு­வத்­தின் உப­கா­ரச் சம்­ப­ளம் கிடைத்­தது.

"இப்­ப­ணி­யில் என்­னால் ஒரு தலை­வ­ரா­க­வும் ஒரு பொறி­யா­ள­ரா­க­வும் ஒரே நேரத்தில் செயல்­பட முடி­வது எனக்கு நிறை­வ­ளிக்­கிறது," என்று சித்­தார்த் கூறி­னார்.

மூத்த ராணுவ வல்­லு­நர்­க­ளாக நேற்று நிய­ம­னம் பெற்ற 93 அதி­கா­ரி­களில் 4ஆம் நிலை ராணுவ வல்­லு­ந­ரா­கப் பயிற்­சி பெற்ற சாய் சித்­தார்த்­தும் ஒரு­வர்.

பரா­ம­ரிப்பு, பொறி­யி­யல் பிரி­வில் சேவை­யாற்­ற­வுள்ள இவர், பல்­கலைக்­க­ழ­கத்­தில் கற்ற திறன்­களும் நுணுக்­கங்­களும் தனது பணி­யில் சிறந்து விளங்க உத­வி­யாக இருக்­கு­மென நம்­பு­கி­றார்.

ராணுவ வாக­னங்­களும் ஆயு­தங்­களும் சீரான நிலை­யில் இருப்­பதை உறுதிசெய்து, போர்க்­கா­லப் பயிற்­சி­கள் சிறப்­பாக நடந்­தேற உத­வு­வ­தன் வழி நாட்­டின் பாது­காப்­பில் பங்­காற்­று­வது மகிழ்ச்­சி­அளிப்­ப­தாக சித்­தார்த் கூறினார்.

தற்­காப்பு அமைச்சு, மனி­த­வள அமைச்­சின் மூத்த துணை அமைச்­சர் ஸாக்கி முக­மது, நேற்று தெமா­செக் கழ­கக் கட்­ட­டத்­தில் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கப் பங்­கேற்று புதி­தாக நிய­மனம் பெற்ற வீரர்­க­ளுக்கு சான்­றி­தழ்­களை வழங்­கி­னார்.

"மாறி­வ­ரும் பாது­காப்­புச் சூழ­லில் ஏற்­படும் இணைய, மின்­னி­லக்­கச் சம்­ப­வங்­க­ளைச் சமா­ளிப்­ப­தற்கு தற்­காப்பு அமைச்­சும் சிங்­கப்­பூர் ஆயு­தப்­ப­டை­யும் தொடர்ந்து மேம்­பட்டு வரு­வது அவ­சி­யம். உயர்­தர பயிற்­சி­க­ளின் வழி இது­போன்ற ராணுவ வல்­லு­நர்­களை உரு­வாக்­கு­வது, நாட்­டின் பாது­காப்­பிற்கு வலு­சேர்க்­கும்," என்­றார் அவர். எதிர்­கா­லத்­திற்கு ஏற்ற, நிலை­யான சிங்­கப்­பூர் ஆயு­தப்­ப­டையை உரு­வாக்­கு­வது இத்­த­கைய வீரர்­க­ளின் கையில் உள்­ள­தென அமைச்­சர் கூறி­னார்.