மூத்த ஊழியர்களுக்கு வாழ்க்கைத்தொழில் திட்டமிடல்: முதலாளிகளுக்குப் புதிய வழிகாட்டி

மூத்த ஊழியர்களுக்கு வாழ்க்கைத்தொழில் திட்டமிடல்: முதலாளிகளுக்குப் புதிய வழிகாட்டி

1 mins read
0c80a8c4-26bd-4f51-9e4d-d4d74fac35b2
-

மூத்த ஊழி­யர்­க­ளுக்கு வாழ்க்­கைத்­தொ­ழில் தொடர்­பான திட்­ட­மி­ட­லைச் சிக்­க­லின்­றிச் செய்­வ­தற்கு இனி முத­லா­ளி­கள் புதிய வழி­காட்­டிப் புத்­த­கம் ஒன்றை நாட­லாம். 'கட்­ட­மைக்­கப்­பட்ட வாழ்க்­கைத்­தொழில் திட்­ட­மி­டல் வழி­காட்­டிப் புத்­த­கம்' (The Structured Career Planning guidebook) நேற்று வெளி­யி­டப்­பட்­டது.

வாழ்க்­கைத்­தொ­ழில், திறன் மேம்­பாட்டு ஆகி­ய­வற்­றில் ஊழி­யர்­களை ஈடு­ப­டுத்­தும் செயல்­மு­றையை நடப்­புக்­குக் கொண்­டு­வ­ரும் ஒரு கட்­ட­மைப்பை இந்த வழி­காட்­டிப் புத்­த­கம்­வழி முத­லா­ளி­கள் அறிந்து­கொள்­ள­லாம்.

சிங்­கப்­பூ­ரின் மூப்­ப­டை­யும் ஊழி­ய­ர­ணிக்கு ஆத­ரவு அளிப்­ப­தற்கு இந்­தத் திட்­டம் அவ­சி­யம் என்று புத்­தக வெளி­யீட்டு நிகழ்­வின்­போது மனி­த­வள மூத்த துணை அமைச்­சர் டாக்­டர் கோ போ கூன் தெரி­வித்­தார். தற்­போது சிங்­கப்­பூர் ஊழி­யர்­களில் 55 வய­துக்கு மேல் சுமார் 25 விழுக்­காட்­டி­னர் இருக்­கும் நிலை­யில் மேலும் அதிக காலம் நீடிக்­கக்­கூ­டிய வாழ்க்­கைத்­தொ­ழில்­களுக்கு மூத்­தோர் தயா­ராக இருப்­பதை உறு­தி­செய்ய வேண்­டும் என்­றார் அமைச்­சர் கோ.

"ஒரு­வர் ஓய்­வு­பெ­றும் வயது வரம்பை உயர்த்­து­வது உண்மை சவால் அல்ல. நம் ஊழி­யர்­கள் தொடர்ந்து திறன் மேம்­பாட்­டில் ஈடு­பட்டு வர்த்­தக, தொழில்­துறை தேவை­க­ளுக்கு ஏற்ப இருப்­பதை உறு­தி­செய்­வதே உண்மை சவால்," என்­றார் அவர்.

மனி­த­வள அமைச்­சு­டன் இணைந்து இந்த வழி­காட்­டிப் புத்­த­கத்தை சிங்­கப்­பூர் தேசிய முத­லாளி­கள் சம்­மே­ள­னம் வெளி­யிட்­டுள்­ளது.