குழந்தை மரணம்: ஆடவர் மீதான கொலைக் குற்றம் நிரூபணம்

குழந்தை மரணம்: ஆடவர் மீதான கொலைக் குற்றம் நிரூபணம்

2 mins read
fe50ae8f-ff30-4fd9-bd28-dace4cd66b0d
-

2019ல் தம்முடைய முன்­னாள் காத­லி­யின் ஒன்­பது மாதக் குழந்­தை­யைக் கொன்­ற­தாக முகம்­மது அலிஃப் முகம்­மது யூசோஃப், 29, என்­ப­வர் மீதான குற்­றம் நேற்று நிரூ­ப­ண­மா­னது. இந்­தக் குழந்தை தம் கையி­லி­ருந்து நழுவி கீழே விழுந்­த­தா­கக் கூறிய அலி­ஃபின் தற்­காப்பு வாதத்தை ஏற்க உயர் நீதி­மன்­றம் மறுத்­து­விட்­டது.

இஸ் ஃபயாஸ் ஸயானி அகமது (படம்) எனும் இக்­கு­ழந்­தையை தம் கையில் தூக்கி வைத்­தி­ருந்த தாம், வேன் கதவை மூடி­ய­போது குழந்தை நகர்ந்­த­தில் அதன் தலை வேனின் தரைப் பல­கை­யில் அடித்து, தரை­யில் விழுந்­த­தாக அலிஃப் கூறி­னார்.

ஆனால், வேனின் தரைப்பல­கை­யில் குழந்­தை­யின் தலையை அழுத்தியதில், இதற்கு மர­ணம் விளை­விக்கப்பட்டதா­க உயர் நீதி­மன்ற நீதி­பதி மேவிஸ் சியோன் தமது தீர்ப்பில் கூறினார்.

குழந்தை தவறி கீழே விழுந்­த­தாக அலிஃப் கூறி­யது, குழந்­தை­யின் பிரே­தப் பரி­சோ­தனை முடிவு மற்­றும் மருத்­து­வ நிபு­ண­ரின் கருத்­துக்கு ஒத்­தி­ருக்­க­வில்லை என்­பதை நீதி­பதி சியோன் கண்­ட­றிந்­தார்.

தலை­யில் ஏற்­பட்ட கடு­மை­யான காயம் கார­ண­மாக, மூளை­யில் ரத்­தக் கசிவு ஏற்­பட்டு குழந்தை மர­ணம் அடைந்­ததை தட­ய­வி­யல் நிபு­ணர் கில்­பர்ட் லாவ் கண்­ட­றிந்­தார்.

இந்தக் கு­ழந்தை உண்­மை­யிலேயே கீழே விழுந்து மர­ணம் ஏற்­படும் அள­விற்­குக் காயம் ஏற்­பட்­டி­ருந்­தால், அதன் மண்டை ஓட்­டில் சிதைவு அல்லது கீறல் ஏற்­பட்­டு இ­ருக்கும். ஆனால், அப்­படி எது­வும் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை என்று டாக்­டர் லாவ் சாட்­சி­யம் அளித்­தார்.

காவல்­து­றை­யி­டம் அலிஃப் அளித்த சாட்­சி­யத்­தில், குழந்­தை­யின் தலையை வேனின் தரைப் பல­கை­யில் அழுத்­தி­யதை ஒப்­புக்­கொண்­டா­லும், தம் கையி­லி­ருந்து நழுவி விழுந்­த­தில் அதன் தலையில் காயம் ஏற்­பட்­ட­தா­கக் கூறி இப்­ப­டி­யும் அப்­ப­டி­யு­மாக ஊச­லா­டி­னார்.

அலி­ஃபின் வழக்கு ஆகஸ்ட் மாதத்­துக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்டு உள்­ளது. அவர் மரண தண்­டனை அல்­லது ஆயுள் தண்­ட­னையை எதிர்­நோக்­கு­கி­றார்.