சிறுவயது ஆர்வத்தை வளர்த்துக்கொண்டு இன்று ஆசிரியர்களாகும் அஞ்சனா, ரிவினேஷ்

சிறுவயது ஆர்வத்தை வளர்த்துக்கொண்டு இன்று ஆசிரியர்களாகும் அஞ்சனா, ரிவினேஷ்

2 mins read
42a2726e-48da-458b-b588-664552704cd1
அஞ்சனா சங்கர் மற்றும் ரிவினேஷ் கண்ணையா. படங்கள்: தேசிய கல்விக் கழகம் -
multi-img1 of 2

அருணா கந்­த­சாமி

தன் தாயா­ரின் தமிழ்ச் சிறு­க­தை­களை வாசித்து வளர்ந்­த­தால் தமிழ்­மொழி மீது ஆர்­வம் ஏற்­பட்­ட­தாக 25 வயது அஞ்­சனா சங்­கர் கூறி­னார். இவர் நன்­யாங் தொழில்­நுட்பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் கடந்த இரு தினங்­க­ளாக நடை­பெற்ற பட்­ட­ம­ளிப்பு விழா­வில் தமிழ்­மொழிக் கற்­பித்­தல் துறை­யில் தனது பட்­டயத்­தைப் பெற்­றார்.

சிறு வய­தி­லி­ருந்தே கட்­டு­ரைப் போட்­டி­களில் கலந்­து­கொண்டு முதல் பரி­சை­யும் வென்­றுள்ள இவர், தனது தமிழ் ஆர்­வத்­திற்­கு தனது வீட்­டுச் சூழல் வித்­திட்­ட­தா­கப் பகிர்ந்­து­கொண்­டார்.

பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் தமிழ்­மொழி சார்ந்த துறை­யில் சேர எண்­ணி­னார்.

ஆனால் அப்­போது தமிழ்­மொழிப் பாடங்­கள் இல்­லாத கார­ணத்­தால் தெமா­செக் பல­து­றைத் தொழிற்­கல்லூ­ரி­யில் கணக்­கி­யல் துறை­யில் சேர்ந்­தார்.

கற்­பித்­தல் துறை, மாண­வர்­களு­டன் உற­வா­டும் சூழல் ஆகி­ய­வற்றை விரும்­பிய அஞ்­சனா, பின்­னர் தேசிய கல்­விக் கழ­கத்­தில் தமிழ்­மொழி சார்ந்த பட்­ட­யக்­கல்வியை மேற்­கொண்­டார்.

வீட்­டில் மாண­வர்­கள் தமிழ் பேசும் பழக்­கத்தை ஊக்­கு­விக்­க­வேண்­டும் என்­பதை உணர்ந்த அவர், இந்த குறிக்­கோளை அடைய மாண­வர்­க­ளின் கவ­னத்தை ஈர்க்­கும் வித­மா­கத் தொழில்­நுட்­பத்­தின் உத­வி­கொண்டு புத்­தாக்க முறை­யில் பாடங்­க­ளைத் திட்­ட­மி­ட தான் முயற்சி எடுப்­ப­தா­கக் கூறி­னார்.

நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­கலைக்­க­ழ­கத்­தில் வர்த்­தக நிர்­வாகத் துறை­யில் தனது இளங்­கலைப் பட்­டத்­தை­யும் தேசிய கல்­விக் கழ­கத்­தில் உடற்­ப­யிற்­சிக் கல்­வி­யில் பட்­டப்­ப­டிப்­புக்­குப் பிந்­திய பட்­ட­யத்­தை­யும் ரிவி­னேஷ் கண்ணையா, 28, பெற்­றுள்­ளார்.

தொடக்­கப்­பள்ளி காலம் முதல் விளை­யாட்­டு­களில் மிகுந்த ஈடு­பாடு கொண்­டுள்ள ரிவி­னேஷ், காற்­பந்து, ஹாக்கி, தரைப்­பந்து, செப்பாக் தக்ரா, நீர்ப்பந்து எனப் பல விளை­யாட்­டு­களில் ஈடு­பட்­டுள்­ளார். பல்­க­லைக்­க­ழக விளை­யாட்­டுக் குழுக்­க­ளி­லும் விளை­யாடி­உள்­ளார்.

"நான் என் நண்­பர்­க­ளோடு விளை­யா­டும்­போது அவர்­கள் எவ்­வாறு தங்­க­ளின் திறன்­களை மேம்­படுத்­த­லாம் என்று ஆலோ­சனை கூறு­வேன். என் ஆலோ­ச­னை­களைப் பின்­பற்றி அவர்­கள் வெற்றி­பெ­றும்­போது எனக்­கும் அது மன­நி­றைவை அளிக்­கும். இதையே என் முழு­நே­ரப் பணி­யாக்­கும் எண்­ணம் தோன்­றவே இரண்­டா­வது பட்­டப்­ப­டிப்­பாக உடற்­ப­யிற்­சிக் கல்­வித் துறை­யில் சேர்ந்­தேன்," என்­றார் ரிவி­னேஷ்.

தனது பல்­க­லைக்­க­ழக நாள்­களில் தன்­னை­விட இளைய மாண­வர்­க­ளுக்கு ஹாக்கி பயிற்­சி­யா­ள­ராக இருந்­தது, அவர்­க­ளைப் போட்­டி­க­ளுக்­காக தயார்­ப­டுத்­தி­யது போன்­றவை தனக்கு மறக்க முடி­யாத அனு­ப­வ­ங்களாக இருந்த தாகவும் அவர் பகிர்ந்­து­கொண்­டார். வர்த்­தக நிர்­வா­கத் துறை­யில் பட்­டம் பெற்­றா­லும் ஆசி­ரி­ய­ரா­கப் பணிபுரி­ய­வேண்­டும் என்­ப­தில் அவர் உறு­தி­யாக இருக்­கி­றார்.

மூன்று அங்­கங்­க­ளாக நடை­பெற்ற பட்­ட­ம­ளிப்பு விழா­வில் மொத்­தம் 843 மாண­வர்­கள் தங்­க­ளின் பட்­ட­யக் கல்வி மற்­றும் பட்­டப் படிப்­புக்­கான சான்­றி­தழ்­க­ளைப் பெற்­றனர்.