உயரத்திலிருந்து விழுவது முதன்மை காரணம்

உயரத்திலிருந்து விழுவது முதன்மை காரணம்

2 mins read
14e55762-95d2-4b15-a91b-2f97306c7f4f
-

சிங்­கப்­பூ­ரில் இந்த ஆண்டு ஏற்­பட்ட வேலை­யிட மர­ணங்­க­ளுக்கு உய­ரத்­தி­லி­ருந்து விழுந்­தது முதன்மை கார­ண­மாக கூறப்­பட்­டுள்­ளது.

இவ்­வாண்டு இது­வரை 29 பேர் வேலை­யி­டங்­களில் இறந்­த­னர். அவர்­களில் ஏழு பேர் உய­ரத்­தி­லி­ருந்து விழுந்து உயிர் இழந்­த­னர்.

இவ்­வாண்டு வேலை­யி­டங்­களில் 11 பேர் விழுந்­த­தால் மாண்­ட­னர்.

அவர்­களில் உய­ரத்­தி­லி­ருந்து விழுந்து இறந்த ஏழு பேரும் அடங்­கு­வர். மேலும் இரு­வர் கப்­பல்­களில் வேலை செய்­து­கொண்­டி­ருந்­த­போது கட­லில் விழுந்­த­னர்.

ஒரு­வர் வாக­னத்­தி­லி­ருந்து வெளி­யே­றி­ய­போது விழுந்து இறந்­தார். மற்­று­மொ­ரு­வர் வேலை­யி­டத்­தில் தடுக்கி விழுந்து மாண்­டார்.

உய­ரத்­தி­லி­ருந்து விழுந்­த­தைத் தவிர, வாகன விபத்­து­களும் கருவி­கள் செய­லி­ழந்­த­தும் கட்­ட­டங்­கள் குலைந்­த­தும் வேலை­யிட மர­ணங்­க­ளுக்கு முக்­கிய கார­ணங்­க­ளா­கக் கூறப்­பட்­டன.

நேற்று நடை­பெற்ற வேலை­யிட பாது­காப்­புக் கருத்­த­ரங்­கில் இந்த விவ­ரங்­கள் தெரி­விக்­கப்­பட்­டன.

வேலை­யிட விபத்­து­க­ளுக்கு பெரும்­பா­லும் மனி­தத் தவ­று­தான் கார­ண­மாக உள்­ளதை விசா­ர­ணை­கள் காட்­டி­ய­போ­தும், யார் மீதும் பழி­போ­டு­வ­தில் பய­னில்லை என்று மனி­த­வள அமைச்­சின் வேலை­யி­டப் பாது­காப்பு, சுகா­தா­ரப் பிரி­வைச் சேர்ந்த கோ சின் கியோங் கூறி­னார். விசா­ரணை, சோதனை நிபு­ணர் பிரி­வின் துணை இயக்­கு­ந­ராக அவர் பொறுப்பு வகிக்­கி­றார்.

பொறி­யி­யல், தொழில்­நுட்­பம், பாது­காப்பு சார்ந்த வடி­வ­மைப்பு ஆகி­ய­வற்­றின் மூலம் வேலை­யிட ஆபத்­து­களை நீக்க வழிகள் தேட வேண்­டும் என்­றார் திரு கோ.

டார்­கெட் ஸீரோ ஃபோல்ஸ் எனும் அந்த ஒரு நாள் கருத்­த­ரங்­குக்கு வேலை­யி­டப் பாது­காப்பு மன்­றம் ஏற்­பாடு செய்­தது. அதில் வேலை­யி­டப் பாது­காப்பு அதி­கா­ரி­கள், நிறு­வ­னப் பிர­தி­நி­தி­கள் உள்­ளிட்ட 800 பேர் கலந்­து­கொண்­ட­னர்.

வலு­வில்­லாத தரைகள், ஏணி கள், கூரை­கள் உள்­ளிட்ட உய­ர­மான இடங்­களில் வேலை செய்­யும் போது கடைப்­பி­டிக்­கும் சிறந்த நடை­மு­றை­களை தொழில்­துறை நிபு­ணர்­கள் பகிர்ந்­து­கொண்­ட­னர். வேலை­யி­டத்­தில் மின்­கம்­பி­களை கட்­டி­வைக்­கா­மல் அப்­ப­டியே வைப்­ப­தால்­கூட விபத்­து­கள் நிக­ழ­லாம் என்று திரு கோ சுட்­டிக்­காட்­டி­னார்.

சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்து கொண்ட மூத்த மனி­த­வள அமைச்­சர் ஸாக்கி முகம்­மது, வேலை­யி­டப் பாது­காப்­பை­யும் சுகா­தா­ரத்­தை­யும் புறக்­க­ணிக்­கக்­கூ­டாது என்­ப­தைக் கடந்த சில மாதங்­க­ளின் துய­ரச்­சம்­ப­வங்­கள் காட்­டு­வ­தா­கக் கூறி­னார். வேலை­யிட விபத்­து­க­ளைக் குறைக்கும் அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கை­க­ளை­யும் அவர் விவ­ரித்­தார்.