நுண்கிருமிகளைப் பயன்படுத்தி கழிவுநீரிலிருந்து போஸ்பரஸ் எனப்படும் எரிமத்தை நீக்கும் புதிய வழிமுறையை உள்ளூர் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
நன்யாங் தொழில்நுட்பப் பல் கலைக்கழகத்தின் சுற்றுப்புற உயிர் அறிவியல் பொறியியலுக்கான சிங்கப்பூர் நிலையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இதை உருவாக்கினர்.
இதனால் போஸ்பரஸ் கனிமத்தால் பாசி திடீரென்று வேகமாக பெருகுவதைத் தடுக்க முடியும். சிங்கப்பூர் போன்ற வெப்பமண்டல நாடுகளில் உள்ள வெப்பநீரில் பாசி அதிகம் படரக்கூடும்.
பாசி படர்வதால் தண்ணீரில் உள்ள உயிர்வாயு குறையும். கடல் விலங்குகளைக் கொல்லும் அதிக நச்சை அந்தப் பாசி வெளியாக்கும். இதனால் தண்ணீரிலிருந்து போஸ்பரஸை நீக்குவது முக்கியம்.
சிங்கப்பூரில் உள்ள கழிவுநீரிலிருந்து போஸ்பரஸ் அகற்றப்படுவதில்லை என்று அறிவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது. சிங்கப்பூரின் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரில் போஸ்பரஸ் இருப்பதால் குடிநீருக்கோ இங்குள்ள கடல் நீருக்கோ எந்த பாதிப்பும் இல்லை.
ஆனால் தனது சுத்திகரிப்பு ஆலைகளில் தற்செயலாக போஸ்பரஸ் அகற்றப்படுவதைக் கவனித்த பொதுப் பயனீட்டுக் கழகம், அது குறித்து நன்யாங் தொழில்நுட்பப் பல்கலை விஞ்ஞானிகளுடன் பணியாற்றியது.
போஸ்பரஸை நீக்கும் கிருமிகள் யாவை என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

