போதைப்பொருள் கடத்தல் சந்தேக நபர் மிளகு தெளிப்பானால் அதிகாரிகளைத் தாக்கினார்

போதைப்பொருள் கடத்தல் சந்தேக நபர் மிளகு தெளிப்பானால் அதிகாரிகளைத் தாக்கினார்

2 mins read
26dafd28-3c8d-411c-b015-7f416940dc41
ஆட­வர் சிறிய, கொக்கியுள்ள கரம்­பிட் கத்­தியை வைத்­தி­ருந்­தார். இத்தகைய கத்திகள் இந்தோனீசியாவைச் சேர்ந்தவை­. -
multi-img1 of 2

போதைப்­பொ­ருள் கடத்­திய சந்­தே­கத்­தின்­பே­ரில் அதி­கா­ரி­கள் தன்­னைக் கைது செய்­த­போது அவர்­களை மிள­குத் தெளிப்­பா­னால் ஓர் ஆட­வர் தாக்­கி­னார். பிடோக் நார்த் அவென்யூ மூன்று அருகே அந்­தச் சம்­ப­வம் நேற்று முன்­தி­னம் நடந்­தது.

அந்த 30 வயது சிங்­கப்­பூர் ஆட­வர் மத்­திய போதைப் பொருள் ஒழிப்­புப் பிரிவு அதி­கா­ரி­க­ளு­டன் மல்­லுக்­கட்­டி­யதை அடுத்து, அதி­கா­ரி­கள் அவரை வலிந்து தடுத்து வைக்க வேண்­டி­யி­ருந்­தது. மத்­திய போதைப் பொருள் ஒழிப்­புப் பிரிவு அந்­தச் சம்­ப­வம் குறித்து நேற்று தெரி­வித்­தது.

விரல்­மூட்­டில் பிடித்து தாக்­கும் நக்­கல்­டஸ்ட்­டர் எனப்­படும் ஆயு­தத்­தை­யும் சிறிய கரம்­பிட் கத்­தி­யை­யும் ஆட­வர் வைத்­தி­ருந்­தார்.

ஆட­வ­ருக்கு மரண தண்­டனை விதிக்­கப்­ப­ட­லாம். அந்­தச் சம்­ப­வத்­தில் மொத்­தம் 141 கிராம் எடை­யுள்ள கஞ்சா பிடி­பட்­டது. அவர் தன்­னி­டம் 22 கிராம் கஞ்­சாவை வைத்­தி­ருந்­தார்.

சிக்­லாப் ரோடு அருகே உள்ள தனி­யார் வீட்­டில் 119 கிராம் கஞ்சா மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தது. 15 கிராம் கஞ்­சா­வுக்கு மேல் கடத்­தி­ய­தாக குற்­றம் நிரூ­பிக்­கப்­ப­டு­வர்­க­ளுக்கு கட்­டா­யம் மரண தண்­டனை விதிக்­கப்­படும்.

ஆட­வ­ரி­ட­மி­ருந்து 181 கிராம் ஐஸ் போதைப் பொருள், 11 எக்ஸ்­டசி மாத்­தி­ரை­கள், 21 எரி­மின்-5 மாத்­தி­ரை­கள் ஆகி­ய­வை­யும் பிடி­பட்­டன. ஈசூன் அவென்யூ 11ல் உள்ள மற்­றோர் இடத்­தில் அவை மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தன. இந்த போதைப் பொருள்­க­ளின் சந்தை மதிப்பு $47,000 ஆகும்.

கைப்­பற்­றப்­பட்ட கஞ்­சா­வை­யும் ஐஸ்­ஸை­யும் 170 போதைப் புழங்கி­ கள் ஒரு வாரத்­துக்கு பயன்­படுத்தி இருக்க முடி­யும் என்று மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.