கோத்­த­பாய இங்கு அடைக்­க­லம் நாட­வும் இல்லை, அவ­ருக்கு அடைக்­க­லம் வழங்­கப்­ப­ட­வும் இல்லை: சிங்கப்பூர் அரசு

கோத்­த­பாய இங்கு அடைக்­க­லம் நாட­வும் இல்லை, அவ­ருக்கு அடைக்­க­லம் வழங்­கப்­ப­ட­வும் இல்லை: சிங்கப்பூர் அரசு

2 mins read
93145e1e-553d-46a3-a9ca-3e124c3b04ca
-

சிங்கப்பூருக்கு நேற்று சவூதி அரேபியா விமானம் வழி வந்திறங்கிய இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே தமது அதிபர் பதவியிலிருந்து விலகியுள்ளார். சிங்கப்பூரிலிருந்து மின்னஞ்சல் வழி அவர் தமது பதவி விலகலை இலங்கை அரசுக்கு அனுப்பி உள்ளதாக அறியப்படுகிறது.

திரு கோத்­த­பா­ய­வின் சிங்­கப்­பூர் வருகை குறித்து ஊட­கங்­க­ளின் கேள்­வி­க­ளுக்கு சிங்­கப்­பூர் வெளி­யு­றவு அமைச்­சின் பேச்­சாளர் ஒரு­வர் பதி­ல­ளித்­தார். சிங்­கப்­பூ­ருக்கு தனிப்­பட்ட வருகை மேற்­கொண்­டுள்ள திரு கோத்­த­பாயவுக்கு சிங்­கப்­பூ­ருக்­குள் நுழைய அனு­மதி வழங்­கப்­பட்­டு உள்ளதை அப்­பேச்­சா­ளர் உறு­திப்­படுத்­தி­னார்.

"அவர் (திரு கோத்­த­பாய) இங்கு அடைக்­க­லம் நாட­வும் இல்லை, அவ­ருக்கு அடைக்­க­லம் வழங்­கப்­ப­ட­வும் இல்லை. சிங்கப்பூர் பொது­வாக அடைக்­க­லத்­திற்­கான கோரிக்­கை­களை ஏற்­பதில்லை," என்று அப்­பேச்­சா­ளர் விவ­ரித்­தார். திரு கோத்­த­பாய, சமூக வருகை அனு­ம­தி­யின்­கீழ் இங்கு வந்­தி­ருப்­ப­தாக சிங்­கப்­பூர் காவல்­துறை வெளி­யிட்ட அறிக்கை கூறி­யது. "பொது­மக்­கள், சிங்­கப்­பூ­ரர்­கள், சிங்­கப்­பூர்­வா­சி­கள், வேலை அனு­மதி அட்டை வைத்­தி­ருப்­பவர்கள், சமூக வரு­கை­யா­ளர்­கள் உள்­ளிட்ட அனை­வ­ரும் உள்­ளூர் சட்ட திட்­டங்­க­ளுக்கு உட்­பட்டு நடக்­கு­மாறு காவல்­துறை கேட்டுக்­கொள்­கிறது.

"சட்­ட­வி­ரோ­த­மா­கக் கரு­தப்­படும் ஒன்­று­கூ­டல்­களில் பங்­கேற்­போ­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்," என்று காவல்­துறை எச்­ச­ரித்­தது.

திரு கோத்­த­பாய இருந்த விமானம் சாங்கி விமான நிலை­யத்­தில் தரை­யி­றங்­கி­ய­வு­டன், இரவு 7.30 மணிக்­கெல்­லாம் 12க்கும் மேற்­பட்ட செய்­தி­யா­ளர்­களும் காணொ­ளிப் பதி­வா­ளர்­களும் விஐபி காம்­பி­ளக்ஸ் நுழை­வா­யி­லுக்கு வெளியே திரண்­ட­னர்.

சவூதி அரே­பி­யன் ஏர்­லைன்ஸ் விமா­னம் தரை­யி­றங்க இருந்த சாங்கி விமான நிலை­யம் முனை­யம் 3ல் உள்ள வரு­கை­யா­ளர் பகு­தி­யில் தம் கண­வ­ரு­டன் காத்­தி­ருந்­தார் இலங்­கை­ய­ரான திரு­வாட்டி ஃபாத்திமா.

சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சி­க­ளான அத்­தம்­பதி, இரவு 8 மணிக்­குப் புறப்­பட்ட விமா­னம் ஒன்­றில் தங்­கள் மகனை அனுப்­பி­வைக்க விமான நிலை­யத்­திற்கு வந்­த­னர். அதோடு, திரு கோத்­த­பாயவைக் காண அவர்­கள் முடி­வெ­டுத்­த­னர்.

"இலங்­கை­யில் நில­வ­ரம் படு­மோ­ச­மாக உள்­ளது. மக்­கள் அவதி­யு­று­வ­தைக் கண்டு நாங்­கள் மிகுந்த வேதனை அடைந்­தோம். அந்த வகையில் சிங்­கப்­பூரில் தங்க நாங்கள் கொடுத்து வைத்­தி­ருக்­கி­றோம்," என்­றார் இல்லத்­த­ர­சி­யான திருவாட்டி ஃபாத்திமா.

நேற்று இரவு 8 மணிக்­குப் பிறகு, வெள்ளை நிற பிஎம்­ட­பிள்யூ, கறுப்பு நிற மெர்­சி­டிஸ் விட்டோ, கறுப்பு நிற டொயோட்டா அல்­ஃபார்ட் ஆகிய மூன்று வாக­னங்­கள் வளாகத்­தில் இருந்து வெளி­யேறியதைச் செய்தியாளர்கள் கண்டனர். செர்ட்­டிஸ் சிஸ்கோ நிறு­வ­னத்­தைச் சேர்ந்த இரு ஓட்டு­நர்­களும் காவல்­துறை கார் ஒன்றும் அந்த மூன்று வாக­னங்­க­ளுக்கு முன்­னால் சென்­றன. அந்த வாக­னங்­கள் எதி­லும் திரு கோத்­த­பாய காணப்­ப­ட­வில்லை.