தேர்தலில் வெற்றி: ஜப்பானிய பிரதமர் கிஷிடாவுக்கு வாழ்த்து அனுப்பிய பிரதமர் லீ

தேர்தலில் வெற்றி: ஜப்பானிய பிரதமர் கிஷிடாவுக்கு வாழ்த்து அனுப்பிய பிரதமர் லீ

1 mins read
ad813714-1c08-47e6-a61f-78bf4311b62e
-

ஜப்­பா­னிய பிர­த­மர் ஃபுமியோ கிஷி­டா­வின் கட்சி அண்­மைய தேர்­த­லில் வெற்றி பெற்­ற­தற்­காக அவ­ருக்கு பிர­த­மர் லீ சியன் லூங் வாழ்த்து அனுப்­பி­யுள்­ளார்.

முன்­னைய பிர­த­மர் ஷின்சோ அபே­வின் மறை­வால் துய­ரம் மிகுந்த காலகட்டத்தில் இந்த வெற்றி கிடைத்­துள்­ளது என்­றார் பிர­த­மர் லீ.

அதே நேரத்­தில் இந்த வெற்றி திரு கிஷி­டா­வின் தலை­மைத்­து­வம் மீது ஜப்­பா­னிய மக்­கள் வைத்­தி­ருக்­கும் நம்­பிக்­கை­யின் வலு­வான அறி­குறி என்று திரு லீ தெரி­வித்­தார்.

திரு லீ தமது வாழ்த்­துக் கடி­தத்தை திரு கிஷி­டா­வுக்கு நேற்று அனுப்­பி­னார்.

கடந்த ஜூலை 10ஆம் தேதி ஜப்­பா­னின் நாடா­ளு­மன்ற மேல­வைக்­குத் தேர்­தல் நடத்­தப்­பட்­டது. அதில் திரு கிஷி­டா­வின் தலை­மை­யி­லான மித­வாத ஜன­நா­ய­கக் கட்­சி­யும் அதன் கூட்­டணி கட்­சி­யும் பெரும் வெற்­றி­யைப் பெற்­றன.

தேர்­த­லுக்கு இரண்டு நாள்­ களுக்கு முன்­னர்­தான் திரு ஷின்சோ அபே, பிர­சா­ரக் கூட்­டத்­தில் துப்­பாக்­கிக்­கா­ர­னால் சுட்­டுக் கொல்­லப்­பட்­டார்.

பிர­த­மர் கிஷி­டா­வுக்கு அனுப்­பிய கடி­தத்­தில் சிங்­கப்­பூ­ருக்­கும் ஜப்­பா­னுக்­கும் இடையே சிறந்த பன்­முனை உறவு இருப்­ப­தா­கக் குறிப்­பிட்­டார்.

அதற்கு இரு­நாட்டு மக்­க­ளி­டையே மன­மார்ந்த பிணைப்­பும் பல துறை­க­ளி­லும் அணுக்­க­மான ஒத்­து­ழைப்­பும் அடித்­த­ம­ள­மாக உள்­ளது என்­றார் திரு லீ.

இரு தலை­வர்­களும் அண்­மை­யில் தோக்­கி­யோ­வி­லும் சிங்­கப்­பூ­ரி­லும் சந்­தித்­த­போது அவர்­கள் மின்­னி­லக்­க­ம­யம், புத்­தாக்­கம், தற்­காப்பு உள்­ளிட்ட துறை­களில் ஒத்­து­ழைப்பை விரி­வாக்­கி­யதாக பிர­த­மர் லீ தெரிவித்தார்.