உள்துறை அமைச்சின் உபகாரச்சம்பளம், நிதி ஆதரவில் மேற்படிப்பு படிக்கும் 148 அதிகாரிகள்

உள்துறை அமைச்சின் உபகாரச்சம்பளம், நிதி ஆதரவில் மேற்படிப்பு படிக்கும் 148 அதிகாரிகள்

2 mins read
a8997ab8-8bbf-49c6-8f39-614d6e540a49
-

உள்­துறை அமைச்சு, மொத்­தம் 148 அதி­கா­ரி­க­ளின் மேற்­ப­டிப்­புக்­காக உப­கா­ரச்­சம்­ப­ளங்­க­ளை­யும் நிதி உதவியையும் வழங்­கி­யுள்­ளது.

உள்­துறை அமைச்­சின் உப­கா­ரச்­சம்­பள, நிதி ஆத­ரவு விரு­து­கள் நேற்று வழங்­கப்­பட்­டன. அவற்­றைப் பெற்­ற­வர்­களில் 118 பேர் இள­ நி­லைப் பட்­டப்­ப­டிப்பை மேற்­கொள்­வர். 30 அதி­கா­ரி­கள் முது­நிலை பட்­டப்­ப­டிப்பை மேற்­கொள்­வர்.

மேலும் எட்டு அதி­கா­ரி­க­ளுக்கு உள்­துறை அமைச்­சின் புத்­த­கப் பரிசு வழங்­கப்­பட்­டது. தங்­கள் வகுப்­பில் தலை­சி­றந்த மாண­வர்­க­ளாக விளங்­கி­ய­வர்­க­ளுக்­கும் சிற்­நத ஆய்­வுக் கட்டுரைகளை எழு­தி­ய­வர்­க­ளுக்­கும் பரிசு வழங்­கப்­பட்­டது.

இவர்­கள் சிங்­கப்­பூர் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கம் லிவர்­பூல் பல்­க­லைக்­க­ழ­கத்­து­டன் இணைந்து வழங்­கும் குற்­ற­வி­யல், பாது­காப்­பில் இள­நிலை (ஹானர்ஸ்) பட்­டத்­துக்­கும் சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் பொதுப் பாது­காப்பு, (ஹானர்ஸ்) பட்டத்துக்­கும் பயில்­கின்­ற­னர்.

உப­கா­ரச்­சம்­ப­ளத்­தை­யும் நிதி ஆத­ர­வை­யும் பெறும் அதி­கா­ரி­கள், குறிப்­பிட்ட காலத்­துக்கு உள்­துறை அமைச்­சில் பணி­யாற்ற வேண்­டும்.

உள்­துறை அமைச்சு தலை­மை­ ய­கத்­தில் நடை­பெற்ற விருது வழங்­கும் நிகழ்ச்­சி­யில் தொடர்பு, தக­வல் அமைச்­ச­ரும் இரண்­டாம் உள்­துறை அமைச்­ச­ரு­மான திரு­மதி ஜோச­பின் டியோ கலந்­து­கொண்­டார். அதி­கா­ரி­க­ளுக்கு வாழ்த்துக் கூறிய திரு­மதி டியோ, அவர்­கள் வழங்­கிய உறு­தி­யான ஆத­ர­வுக்­கும் தியா­கத்­துக்­கும் நன்றி தெரி­வித்­தார். உள்­துறை அமைச்சு அதன் பணியை இது­வரை சிறப்­பாகச் செய்­துள்­ளது என்று திரு­வாட்டி டியோ குறிப்­பிட்­டார்.

அமெ­ரிக்­கா­வைத் தள­மா­கக் கொண்டு செயல்­படும் கேலப் நிறு­வ­னத்­தின் சட்ட ஒழுங்கு குறி­யீட்­டில் சிங்­கப்­பூர் தொடர்ந்து ஏழா­வது ஆண்­டாக ஆகப் பாது­காப்­பான நாடாக தர­வ­ரி­சைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதை அமைச்­சர் சுட்­டிக்­காட்­டி­னார்.

"உள்­துறை அமைச்­சின்­மீது பொது­மக்­க­ளுக்கு அதி­க­ள­வில் நம்­பிக்கை உள்­ளது, என்­றார் அவர்.

இருப்­பி­னும் பல சவால்­கள் உள்­ள­தால், அதி­கா­ரி­க­ளின் மேம்­பாட்­டில் உள்­துறை அமைச்சு முத­லீடு செய்ய வேண்டியுள்­ள­தாக அவர் கூறி­னார்.

"மாறிக்­கொண்டே இருக்­கும், சிக்­க­லான, எதிர்­பா­ரா­ நிகழ்வுகள் அதி­க­ரித்­துவரும், நிலை­யில்லா சூழ­லில் நாம் இயங்கி வரு­கி­றோம்," என்று திரு­மதி டியோ கூறி­னார்.

எதற்­கும் நாம் தயா­ராய் இருக்­க­வேண்­டும் என்ற அவர், பயங்­க­ர­வா­தம், மோச­டிகள், விரோ­தப் போக்­குள்ள தக­வல்­க­ளைப் பரப்­பு­தல், சமூ­கப் பிள­வு­கள் போன்­ற­வற்றை முன்கூட்டியே தடுக்க வேண்டும் என்று அமைச்சர் சொன்னார்.