இந்த ஆண்டு தொடக்கநிலை ஒன்றில் நுழைவுக்காக 28 பள்ளிகளில் குலுக்கல் நடைபெறவுள்ளது. இருக்கும் இடங்களைவிட அதிக முன்பதிவுகளைப் பெற்ற தொடக்கப்பள்ளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பானதை அடுத்து, குலுக்கல் இடம்பெறும்.
தொடக்கநிலை ஒன்றுக்கான பதிவின் 2ஏ கட்டத்தில் 33 பள்ளிகளில் இருக்கும் இடங்களைவிட அதிக முன்பதிவுகள் பெறப்பட்டன. கல்வி அமைச்சு நேற்றுமுன்தினம் இதைத் தெரிவித்தது. சிங்கப்பூரில் மொத்தம் 181 தொடக்கப்பள்ளிகள் இருக்கின்றன. தொடக்கநிலை ஒன்றுக்கான பதிவின் 2ஏ கட்டம் இந்த ஆண்டு மாற்றி அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு பழைய முறைப்படியிலான 2ஏ (2) கட்டத்தில் 17 பள்ளிகளில், இருந்த இடங்களைவிட அதிக முன்பதிவு பெறப்பட்டன.
பெய் ஹுவா பிரெஸ்பிடேரியன் பள்ளி, கொங்ஷாங் தொடக்கப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகள் அதிக பதிவுகளைப் பெற்றன.

