சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையிலான பரந்துவிரிந்த, உண்மையான உறவுகளை இரு நாடுகளும் மறுஉறுதிப்படுத்தின.
இரண்டு நாள் பயணமாக சிங்கப்பூர் வந்துள்ள சீன கம்யூனிச கட்சியின் அனைத்துலகத் துறை அமைச்சர் திரு லியூ ஜியென்சாவ் நேற்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டைச் சந்தித்தார்.
இரு நாடுகளும் பலனடையும் விதமாக ஒத்துழைப்பு வழங்கலாம் என்றும் சிறந்த ஆளுமையும் குடிமக்கள் ஈடுபாடும் எத்தகைய முக்கியத்துவம் வகிக்கின்றன முதலியவை குறித்தும் இரு தலைவர்களும் பேசினர்.
இருதரப்பு ஈடுபாட்டுத் திட்டங்கள் மூலம் சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையே மேலும் அணுக்கமான கூட்டுமுயற்சிகளை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தையும் இரு தலைவர்கள் வலியுறுத்தி இருந்தனர்.

